ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

LIVE|SACRED HEARTS' CATHEDRAL|06:00PM|DAILY MASS|03-02-2026|TUTICORIN DIOCESE

Автор: Sacred Hearts’ Cathedral Tuticorin @ Chinnakovil

Загружено: 2026-02-03

Просмотров: 83

Описание: திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 3, 2026
பொதுக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய்
புனித ஆன்ஸ்காரியு – ஆயர் (வி.நினைவு)
புனித பிளாசியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு)
பொதுக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்

என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே!

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 18: 9-10, 14b, 24-25a, 30- 19: 3

அந்நாள்களில்

அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதைமீது ஏறி வந்து கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது. இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று, “இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன்” என்று கூறினான். யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.

அப்போது தாவீது இரு வாயில்களுக்கும் இடையே அமர்ந்து கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடிவருவதைக் கண்டான். காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், “தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது” என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துகொண்டிருந்தான். அரசர் அவனை நோக்கி, “விலகி, அங்கே நில்” என்று கூற, அவனும் விலகி நின்றான். அப்போது கூசியனும் வந்து, “என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்” என்று கூறினான். “இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, கூசியன், “என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உமக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக!” என்றான்.

அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. “அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்” என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று. போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று, அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.

நற்செய்தி வாசகம்

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
LIVE|SACRED HEARTS' CATHEDRAL|06:00PM|DAILY MASS|03-02-2026|TUTICORIN DIOCESE

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

WOG - 335 | ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் | Fr. Albert Trichy | 17.01.2026

WOG - 335 | ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் | Fr. Albert Trichy | 17.01.2026

LIVE|SACRED HEARTS' CATHEDRAL|06:00PM|DAILY MASS|04-02-2026|TUTICORIN DIOCESE

LIVE|SACRED HEARTS' CATHEDRAL|06:00PM|DAILY MASS|04-02-2026|TUTICORIN DIOCESE

தூய அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை | பங்கு குடும்பவிழா  (04.02.2026) | நேரலை

தூய அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை | பங்கு குடும்பவிழா (04.02.2026) | நேரலை

உவரி கோவிலை நெருங்கிய கடல் | UVARI ANTHONIYAR CHURCH

உவரி கோவிலை நெருங்கிய கடல் | UVARI ANTHONIYAR CHURCH

WIELKA WYPRAWA MARII WIERNIKOWSKIEJ W GŁĄB ROSJI #1

WIELKA WYPRAWA MARII WIERNIKOWSKIEJ W GŁĄB ROSJI #1

Chansons Françaises de Paris | Voyage Romantique en Musique

Chansons Françaises de Paris | Voyage Romantique en Musique

என் கணவர் எனக்கு ஐந்து பெண் குழந்தைகள்..!! தமிழ் புதிய சிறுகதைகள்..!! new Tamil  story

என் கணவர் எனக்கு ஐந்து பெண் குழந்தைகள்..!! தமிழ் புதிய சிறுகதைகள்..!! new Tamil story

Спейс и Зодиак. Хиты восьмидесятых. Космическая музыка.

Спейс и Зодиак. Хиты восьмидесятых. Космическая музыка.

Псалом 26, 50, 90 | Защитные молитвы от врагов, нечистых сил и зла (7 раз)

Псалом 26, 50, 90 | Защитные молитвы от врагов, нечистых сил и зла (7 раз)

Best Mother Mary Songs [Ultimate Catholic Playlist] | Joren Editz

Best Mother Mary Songs [Ultimate Catholic Playlist] | Joren Editz

ХРИСТИАНСКИЕ ПЕСНИ ИСЦЕЛЯЮЩИЕ ДУШУ — Сборник из 20 песен  — Maranatha Brothers

ХРИСТИАНСКИЕ ПЕСНИ ИСЦЕЛЯЮЩИЕ ДУШУ — Сборник из 20 песен — Maranatha Brothers

DM - 213 | இரட்சிப்பை பெற்றீர்களா ? | Fr. Varghese Elavur | Mumbai Retreat Nov 2025

DM - 213 | இரட்சிப்பை பெற்றீர்களா ? | Fr. Varghese Elavur | Mumbai Retreat Nov 2025

Tamil Christian Songs | Roman Catholic Tamil Songs | Christian Tamil Songs #christiansongs #jesús

Tamil Christian Songs | Roman Catholic Tamil Songs | Christian Tamil Songs #christiansongs #jesús

நடந்தால் தான் நேர்ச்சை படகில் போனால் அது டூருங்க | புன்னைக்காயல் புனித தோமையார் ஆலயம்

நடந்தால் தான் நேர்ச்சை படகில் போனால் அது டூருங்க | புன்னைக்காயல் புனித தோமையார் ஆலயம்

LIVE|SACRED HEARTS' CATHEDRAL|08:30PM|FOURTH SUNDAY OF ORDINARY MASS|01-02-2026|TUTICORIN DIOCESE

LIVE|SACRED HEARTS' CATHEDRAL|08:30PM|FOURTH SUNDAY OF ORDINARY MASS|01-02-2026|TUTICORIN DIOCESE

தங்கக் கடை உரிமையாளர் ஏழையாக உள்ளே வந்தார், மேலாளர் வெளியே தள்ளினார்... அடுத்து நடந்த அதிர்ச்சி!

தங்கக் கடை உரிமையாளர் ஏழையாக உள்ளே வந்தார், மேலாளர் வெளியே தள்ளினார்... அடுத்து நடந்த அதிர்ச்சி!

தோல்விகளை அல்ல முயற்சிகளை கடவுள் பார்க்கிறார் | Fr Albert மறையுரை #mass

தோல்விகளை அல்ல முயற்சிகளை கடவுள் பார்க்கிறார் | Fr Albert மறையுரை #mass

5 лютого У НЕБЕЗПЕЧНИЙ ДЕНЬ ТІЛЬКИ ЦЯ МОЛИТВА ВРЯТУЄ! Молебень Господу,Богородиці,Ангелам,Святим

5 лютого У НЕБЕЗПЕЧНИЙ ДЕНЬ ТІЛЬКИ ЦЯ МОЛИТВА ВРЯТУЄ! Молебень Господу,Богородиці,Ангелам,Святим

உங்களுக்கு காசு கொடுக்குதுல அந்த சாமி🤣 | Kutties Chutties | Episode - 13 | Sun Life

உங்களுக்கு காசு கொடுக்குதுல அந்த சாமி🤣 | Kutties Chutties | Episode - 13 | Sun Life

🔴🅻🅸🆅🅴 || அற்புத பெருவிழா || Miracle Festival || சகோ. மோகன் சி. லாசரஸ் || பிப்ரவரி 01, 2026

🔴🅻🅸🆅🅴 || அற்புத பெருவிழா || Miracle Festival || சகோ. மோகன் சி. லாசரஸ் || பிப்ரவரி 01, 2026

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]