தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விடும் மேவாட் கொள்ளையர்கள்... | SBI ATM ROBBERY | HARYANA | TAMILNADU
Автор: ABP Nadu
Загружено: 2021-06-25
Просмотров: 5918
Описание:
தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விடும் மேவாட் கொள்ளையர்கள்... | SBI ATM THEFT | HARYANA | TAMILNADU
#Mevat #SbiRobbery #Haryana
சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்மில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காணாதவகையில் இந்த கொள்ளைச்சம்பவம் அமைந்துள்ளது.
சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள எஸ்.பி ஐ வங்கி ஏடி.எம்மில் பணம் கொள்ளை போனதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் பணத்தை எடுத்து செல்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. இதனால் குழப்பம் அடைந்த வங்கி அதிகாரிகள் ஏதோ தில்லுமுல்லு நடப்பதாக உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபோன்ற கொள்ளை செனாய் நகரில் மட்டுமே நடந்ததாக நினைத்த நிலையில் வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்பாக்கம், வேளச்சேரி என இந்த கொள்ளைச் சம்பவம் ஒரே நாளில் தொடர்ந்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎமை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்னவென்றால் சொந்த அக்கவுண்டில் இருந்த பணத்தைத் தான் எடுத்துள்ளனர். ஆனால் அக்கவுண்டில் இருக்கும் பணம் குறையவே இல்லை. அதாவது, ஓ.கே.ஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடி.எம்மில் ஏடி.எம்.கார்டை பயன்படுத்தி பாஸ்வேர்டை டைப் செய்தால், நாம் பதிவிட்ட பணம் வெளியே வரும். ஆனால் 20 நொடிக்குள் பணத்தை எடுக்கவில்லையென்றால் 20 நொடிக்குள் உள்ளே சென்றுவிடும். பணம் அக்கவுண்டில் இருந்து சென்றுவிட்டதா? அல்லது ஏடிஎம்க்குள் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஏடிஎம் மெஷினில் ஒரு சென்சார் இருக்கும். இதனை தெளிவாக தெரிந்துகொண்ட கும்பல் பணத்தை எடுத்துவிட்டு சென்சாரையும் மறைத்துவிடுவார்கள். இதனால் பணம் மீண்டும் அக்கவுண்டில் வந்துவிட்டது என ஏடிஎம் நினைத்துக்கொள்ளும். அக்கவுண்டில் இருந்து பணம் குறையாது. ஆனால் ஏடிஎம்ல் இருந்து அந்தக்கும்பல் பணத்தை எடுத்துச்செல்லும். கொள்ளையடித்தவர்கள் போலீயான முகவரியை வைத்து வங்கிக்கணக்கு தொடங்கி இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த திருட்டு குறிப்பாக எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மெஷினில் மட்டுமே நடந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் பணம் வெளியே வரும் இடத்திலேயே சென்சார் இருப்பது இந்த ஒரு வங்கியின் ஏடிஎம் மட்டுமே. மற்ற வங்கி ஏடிஎம்களில் சென்சார் வேறு இடத்தில் இருப்பதால் சென்சாரை மறைக்க முடியாது. இந்த லூப் ஹோலை பயன்படுத்திய கொள்ளையர்கள் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மை தேடி தேடி கொள்ளையடித்துள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ டெபாசிட் ஏடி.எம் மிஷினில் பணம் எடுப்பதற்கு எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மத்திய குற்றப்பிரிவு வங்கி தடுப்பு போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலத்தவர்கள் என்றும், கொள்ளையடித்துவிட்டு ஹரியானாவில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனிப்படைபோலீசார் ஹரியானா விரைந்துள்ளனர். மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
The details of the recent theft from the largest bank State Bank of India's (SBI) deposit machines to the tune of Rs 48 lakh seem no less than a script of a Bollywood movie. One person has been arrested in connection with the case from Haryana in connection with the theft of various cash deposit machines of SBI in Tamil Nadu.
In a first-of-its-kind robbery, the police have recovered Rs 4.5 lakh from him. Around 14 cases of such fraud in SBI ATMs have taken place in the city from June 15-18, as per the police release and more than five groups of people are suspected to be behind this ATM crime.
As per the official release, investigation by a special team said "some accused have come from northern States and committed these offences." The release said almost Rs 45 lakh has been syphoned off. The special team has arrested Amir Arsh of Ballabhgarh with the help of the Haryana State police.
In the course of the investigation, the accused confessed to the crime and explained the modus operandi and provided other leads.
"It is learnt that more than five groups have operated in Chennai city. A sum of Rs 4.5 lakh was recovered from him (the arrested person). The special team is camping at Faridabad to arrest the remaining accused," it added.
What was the modus operandi?
A total of Rs 48 lakh has been stolen from Automated Cash Withdrawal and Deposit Machines also known as Cash Deposit Machines (CDM) located in various places, including Velachery here.
There is a 20-second window at the time of withdrawal in ATMs for customers to take the cash and if it was not done, the cash goes back into the machines.
CREDITS:
Reporter: Arunmozhivarman
Camera: Barathwaj
Editing: Vivekanandhan
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: https://tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: