Kalukumalai Paththu (full verson) கழுகு மலைப் பத்து
Автор: S.T Seelan
Загружено: 2021-08-03
Просмотров: 182249
Описание:
கழுகு மலைப் பத்து இது கருத்துடைய சொத்து தொழுவதுக்கு முத்து இது கந்தனின் சித்து.. கதிர்காம் யாத்திரிகர்கள் இதை கைத்தடியாய் பிடித்து கந்தனருள் பெற்றதுதான் ஆயிரம்... இது தேத்தாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் இதனை பெருமையுடன் அளிக்கை செய்கின்றனர்.
கழுகுமலைப் பத்து
*******************************
01)
கழுகுமலை தனிலுறையும் முருகவேலே
கருத்துடனே வுன்பாதமலர் தானே யோத
பழுதொன்ரும் வாராமல் காக்க வேணும்
பச்சைமால் தன் மருகா பார்வதியின் மைந்தா
வழுவாமல் அடியே முன் நிற்க வேண்டும்
வரும்பிழைகள் தனையகற்றி வளியச்செய்வாய்
தெளிவாக உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
02)
காடுதனில் வேங்கை மரமாகி நின்றாய்
கானவர்கள் கண்டுன்னை கடுவே கத்தால்
சாடிடவே மனதிலெண்ணிப் பரிசைகத்தி
தானெடுத்தார் தவிடுபொடி யாக்க வென்று
கூடியே குறவரெல்லாம் நிமித்தங்கண்டு
குமாரவேல் என்றெண்ணி குலைந்திட்டார்கள்
தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
03)
கிட்டாத பொருள்தனைப் போலென்னாளும்
கீர்த்தியுடனே இந்தப்புவியில் யானும்
எட்டிஎட்டியே உன்னைப்பார்க்கும் போது
ஏமாற்றி என்னை விட்டு ஏகலாமோ
சட்டமுடன் தோகை மயில் மீதில் ஏறி
சடாட்சரமாய் என்முன்னே தோன்ற வேணும்
திட்டமுட னுன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
04)
கீர்த்தியுடனே இந்தப்புவியில் யானும்
கிருபையுடன் உன்பதியை தேடி வாரேன்
பூத்தமலர் போல உன்னை காண்பதெப்போ
புண்ணியனே எனக்கு வரம் தருவதெப்போ
வார்த்தையொன்று முறையாயோ வள்ளி வாழ்வே
வந்துனது சந்நிதியில் மனதன்பாகத்
தீர்த்தங்கள் ஆடியுனை துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
05)
குவலயத்தில் அடியேன் யான் செய்த பாவம்
குற்றமெல்லாம் பொறுத்துனது குழந்தை போலக்
கவலையற்று வாழ்ந்திருக்க கருணை தந்து
காப்பதுவுன் செயலல்லோ கார்த்திகேயா
கவலையிளங் கன்றதுதன் தாயைத் தேடி
தயங்குகிறது போலயான் தயங்கலானேன்
சிவலை நிறமார்பழகா செந்தூர்கந்தா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
06)
கூடியே மறலிஎன்னைப் பிடியாவண்ணம்
கொடு நரகிலே நானும் விழுந்திடாமல்
வாடியே மனம் மெலிந்து போகா வண்ண
மாகவே உன்னுடைய கீர்த்தி தந்து
பாடியே பவனொளி வபாய மென்றால்
பறக்குமே பிசாசு முதல் ஏவல் தானும்
தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
07)
கெடுதியுள்ள சூரனை வதையே செய்தாய்
கிளி மொழியாள் வள்ளி தினப் புனத்திலேதான்
படிமீதில் தான் பெரிய பண்டாரம் போல்
பாசி பற்றிய பழுத்த கிழவனாகித்
தடியூன்றி தண்டுக மண்டலமும் கொண்டு
சாட்டங்கமாய் குறவர்க்கெதிரே சென்றாய்
தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
08)
கேசவனார் முருகோனே நீ செய் கோலம்
கொடிதான குமரகுரு வேடனாகி
நேசமுடன் கையிலம்புங் கொண்டு
நிமிசமுடன் வள்ளிதினப் புனத்திலேதான்
பாசமுடன் பெண்ணே கண்ணே என்று
பண்புடைய வள்ளியை நீ பாகம் செய்தாய்
தேசமெல்லாந் திரிந்தலைந்தேன் உன்பாதங்காண சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
09)
கையிலே சேவற்க் கொடியும் வேலும்
வள்ளி தெய்வானையுடன் மயில் மீதேறி
தைய நல்லாள் தீபதூபம் பிடிக்கத்
தாதியர்கள் இருபுறமுங் கவரி வீச
மெய்யுடனே ஆறுமுக ரூபமாகி
வேலவனே வந்தெனக்கு விடைகள் தாரும்
தெய் தெய் என்றுன் பாதந்துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
10)
கொன்றைமலர் வேணியனே உனக்குந்தானே
குழந்தையாய் வந்துதித்த குமர வேலே
அண்டரெல்லாம் உனைக்காண வேண்டியிங்கே
அபயமென்று கையேந்தி அணுகி நிற்பார்
தண்டை கிங்கிணிகாலில் சதங்கை கொஞ்சத்
தானோடி வந்துன் ஒளியைக் காட்டுந்
தெண்டனிட்டே உன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
11)
கோதையர்க ளிருபுறமும் கவரி வீசக்
குளிரான மதிமுகங்க ளாறுந் துண்ணக்
காதலுடன் பன்னிருகை வேலுந் துண்ணக்
கானமயில் மீதேறும் கார்த்திகேயா
வாதுடனே சோதையன் செய் சிகரந் தன்னை
வடிவேலால் நீறு செய்த வானோர் கோவே
சீதமரு கோனே உன் புகழைச்சொன்னேன் சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
12)
கவ்விய பூதமெனை பிடியா வண்ணம்
காத்துனது கிருபை தந்து ரட்சியுமையா
வவ்விய மெய்மறந்து மொரு பசாசு தானும்
பவனொளி பவயமென்றால் பறக்குமேதான்
ஒவ்விய எனைச்சூழும் லாடன் மாடன்
ஒம் நம சிவாய மென்றால் ஓடிடாதோ
செவ்வையா உன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
13)
இக்கணமே இது நல்ல வேளையையா
இதோ பாரும் சந்நிதியில் திருவிழாவை
வணக்கமாய் கற்பூர மடவிளக்கு
வகை வகையாய் கன்னியர்க ளேந்துறார்கள்
எக்காளம் பேரிகை தம்பூர் மேளம்
இடியெனவே எத்திசையும் முழங்கி நிற்க
இக்கணமே உன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: