ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

UNTOLD STORY - ஆசீர்வாதம் செய்யும் ரகசியம்...

Автор: Brahma Suthrakulu

Загружено: 2026-02-21

Просмотров: 246

Описание: பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள்.

முருகன் ஆலயம்.

ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.

குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும்.

இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார்.

எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது.

கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம்.

இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு – தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர்.

#spirituality #spiritual #tamil #aanmeegam #ஆன்மீகம் #trending #brahma #lordshiva
#mustwatch #god #meditation #yoga
##BrahmaSuthrakulu #divine #enlightenment

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
UNTOLD STORY - ஆசீர்வாதம் செய்யும் ரகசியம்...

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

மகா சிவராத்திரி  Special - Part - 3

மகா சிவராத்திரி Special - Part - 3

குருவின் சிந்திக்க வைத்த வார்த்தைகள்...

குருவின் சிந்திக்க வைத்த வார்த்தைகள்...

நான் பெற்ற ஆனந்த அனுபவம்.

நான் பெற்ற ஆனந்த அனுபவம்.

உன் மன கலக்கத்தை போக்கும் தூய மென்பொருள் இதுவே!

உன் மன கலக்கத்தை போக்கும் தூய மென்பொருள் இதுவே!

20 வருடத்துக்கு முன்பு ஐயா ஒரு காணொளியில் பேட்டி கொடுத்த முதல் தொகுப்பு நிகழ்வு

20 வருடத்துக்கு முன்பு ஐயா ஒரு காணொளியில் பேட்டி கொடுத்த முதல் தொகுப்பு நிகழ்வு

Как жить за пределами желаний и похоти? Это путь к жизни без трудностей! Интервью с Нитьянандой С...

Как жить за пределами желаний и похоти? Это путь к жизни без трудностей! Интервью с Нитьянандой С...

நொடிப்பொழுதில் வினைகளைத் தீர்க்கும் விபூதி சித்தர்! | Pollachi Viboothi Siddhar| Nalla Neram Nagaraj

நொடிப்பொழுதில் வினைகளைத் தீர்க்கும் விபூதி சித்தர்! | Pollachi Viboothi Siddhar| Nalla Neram Nagaraj

இந்த சனிப்பெயர்ச்சியின் சூப்பர் ஸ்டார்... இந்த ராசி தான்- Astrologer Harikesanallur Venkataraman -1

இந்த சனிப்பெயர்ச்சியின் சூப்பர் ஸ்டார்... இந்த ராசி தான்- Astrologer Harikesanallur Venkataraman -1

இந்திரன் பற்றிய பயங்கர ரகசியம் | Indra’s Darkest Secret | இந்திரனின் வஜ்ராயுதம் உருவான கதை |

இந்திரன் பற்றிய பயங்கர ரகசியம் | Indra’s Darkest Secret | இந்திரனின் வஜ்ராயுதம் உருவான கதை |

அனைவரையும் சிரிப்பில் தள்ளிய நீலகண்டன் | Neelakandan Comedy Speech | Suki Sivam

அனைவரையும் சிரிப்பில் தள்ளிய நீலகண்டன் | Neelakandan Comedy Speech | Suki Sivam

யாரிடமும் ஒரு அளவுக்கு மேல் பழகாதீர்கள்!!பிரம்ம சூத்திர குழு

யாரிடமும் ஒரு அளவுக்கு மேல் பழகாதீர்கள்!!பிரம்ம சூத்திர குழு

கஷ்டத்திற்கு பின்னால் இருக்கும் நல்லவர்கள் படும்  ரகசியம் இதுதான்!!

கஷ்டத்திற்கு பின்னால் இருக்கும் நல்லவர்கள் படும் ரகசியம் இதுதான்!!

சினத்தை விடு சிவத்தை பிடி! குரு சொன்ன அற்புதம் இதுவே!

சினத்தை விடு சிவத்தை பிடி! குரு சொன்ன அற்புதம் இதுவே!

பேரானந்ததில் இருக்கும் சித்தர்கள் அழைத்தால் வருவார்களா?- Arulmigu Adigalar | Siddhargal Ulagam

பேரானந்ததில் இருக்கும் சித்தர்கள் அழைத்தால் வருவார்களா?- Arulmigu Adigalar | Siddhargal Ulagam

உன் மன அமைதிக்கான முதல் மருந்து – பித்தம் தணிதல் | Dr. Parveen Sultana | Motivational Tamil Speech

உன் மன அமைதிக்கான முதல் மருந்து – பித்தம் தணிதல் | Dr. Parveen Sultana | Motivational Tamil Speech

தந்தை செய்த பாவம் மூத்த பிள்ளைக்கா..! இளையபிள்ளைக்கா..! | Nithyananda Swamigal | GuruNithyam TV

தந்தை செய்த பாவம் மூத்த பிள்ளைக்கா..! இளையபிள்ளைக்கா..! | Nithyananda Swamigal | GuruNithyam TV

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 5 மணி வரை ஏன் எழுகிறீர்கள் புரியுமா!!

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 5 மணி வரை ஏன் எழுகிறீர்கள் புரியுமா!!

இன்று தொடங்குகிறது உங்கள் பொற்காலம்! இதை கவனமாக கேளுங்கள்!

இன்று தொடங்குகிறது உங்கள் பொற்காலம்! இதை கவனமாக கேளுங்கள்!

Еда для ДОЛГОЛЕТИЯ!

Еда для ДОЛГОЛЕТИЯ!

சர்கரை நோய்க்கு மருந்து மாத்திரையே தேவையே இல்லை.! Tenkasi Swamigal #DiabetesAwareness #naturalremedy

சர்கரை நோய்க்கு மருந்து மாத்திரையே தேவையே இல்லை.! Tenkasi Swamigal #DiabetesAwareness #naturalremedy

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]