ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஸ்ரீமத் பாம்பன் சாமி அருளிய இப்பாடலை காலை, மாலை பாராயணம் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

Автор: Tamil Guru Aanmeegam

Загружено: 2023-07-24

Просмотров: 62

Описание: பதினே ழொன்றும்விழை செய்ய  பாத மோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே. 

தேவர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் எனப்படும் பதினெட்டுக் கணங்களும் போற்றுகின்ற சேவடி (யில் உள்ள தண்டை, கிண்கிணி முதலியவை) ஒலித்திடக் களங்கமற்ற நிலவை ஒத்த நின் அழகிய முகமண்டலம் ஒளி செய்யும்படி புன்முறுவல் செய்யும் (உயிர்களுக்குப்) புகலிடமாய் உள்ளவனே! வேல் ஏந்திய குழந்தைத் திருமேனி கொண்டவனே! என் செல்வமே! உன்னைக் காதலோடு தழுவிக் கொள்ள என் கைகள் நீளுகின்றனவே. நீ வந்தருளாயா?

1

சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

சீவி முடித்த தலையில் செம்பொன்னாலான சுட்டியும், காதுகளில் நல்ல குண்டலங்களும் ஒளி செய்ய விளையாடும் வேற்குழவீ! உலகத்தைக் காண வெறுக்கும் என் கண்கள் உன்னைக் காண இச்சை கொள்ளுகின்றனவே! என்னைப் பணிகொள்ள எண்ணி என் முன் வந்தருளாயா?

2

பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு

பாவலர் மெச்சிப் பாடும் வேற்குழவீ! மிகச் சிவந்த உனது பவளம் போன்ற தெய்வத் திருவாயைத் திறந்து தூய இனிய மொழிகளைக் கூறுதற்கு இங்கு வந்தருளாயா? என் இறைவனே! உன் மொழிகளைக் கேட்பதற்கு என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே.

3

பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

பொன்னாலாகிய கண்டசரத்தை நன்கு அணிந்து பொன் ஒளி செய்யும் பெருமையுடைய வேற்குழவீ! உன்னை எண்ணுகின்ற உள்ளமும் வாயும் ஊறுகின்றனவே! என் ஆர்வம் தீரும்படி நல்ல கொவ்வைக்கனி போன்ற நினது வாயிதழை எனக்குத் தருதற்கு இங்கு வந்தருளாயா?

4

எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

எண்ணுதற்கு அரிய வன்மையுடைய கூரிய வேலைப் பிடித்துக் கொண்டு வரும் கண்ணே! சிவந்த குழந்தைத் திருமேனியனே! எனது கண்கள் நாடும் அழகனே! வேறு எதையும் நாடாத என் உள்ளம் உன்னை நாடுகின்றதே. இனிமை நிரம்பிய உன் திருவாயால் எனக்கு முத்தம் தந்தருளாயா?

5

முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

முத்தே! மாணிக்கமே! திருவிளையாடல் செய்யும் ஞான மேனியனாகிய வேற்குழவீ! யாவற்றுக்கும் மூலமானவனே! நினது உச்சியை நன்கு மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மிகுகின்றதே! முல்லை, வெட்சி, நல்ல கடம்ப மலர்களைத் தொடுத்த மாலையணிந்து என் முன்பு வந்தருளாயா?

6

ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

அழகு நிரம்பிய நல்ல இடையில் பொன் வடங்கள் ஆடும்படி விளையாடும் கூரிய வேலையுடைய குழவீ! நினது கால்களையும் மையிட்ட கண்களையும் இன்பம் பெருகும்படி மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மெய்யாய்ப் பெருகுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?


பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு

பொன் போன்ற நினது திருமேனியிலே நல்ல மலர் மணம் கமழும் இன்பனே! வேற்குழவீ நீங்காத அன்பு விளங்கும் புன்முருவல் செய்கின்ற விருப்பத்தால் தோன்றும் நினது பல்லழகு எனது துன்பத்தை அழிக்கின்ற அம்பாகும் என்று என் நெஞ்சம் கூத்தாடுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

8

கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

இனிமை நிரம்பிய சிறந்த கரும்பே! கற்கண்டே! தேனே! இனிய அமுதத்தை உண்ணும் கிளிப்பிள்ளையே! வேற்குழவீ! அன்பரின் அன்பனே! உமாதேவியின் திருமகனே! நீ அணிவதற்கான நல்ல மாலை ஒன்று நான் அன்போடு தருவேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள என் முன்பு வந்தருளாயா!

9

மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.


மாண்பு மிகுந்த சந்த முனிவராகிய அருணகிரிநாதரின் இன்ப வாழ்வே! வேற்குழவீ! நினது அழகைக் காணும் பேறுபெற்றோர் இவ்வுலகில் வேறு ஒன்றையும் அழகு என்று காண்பாரோ? காண மாட்டார். இருவினை நுகர்ச்சிக்கு அஞ்சிய நான் உன்னை நன்கு காண இன்று வந்துள்ளேன். எனது எண்ணம் வீணாகாதபடி இங்கு வந்தருள்வாயாக.

10

சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஸ்ரீமத் பாம்பன் சாமி அருளிய   இப்பாடலை காலை, மாலை பாராயணம் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]