ரிஷபேஷ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
Автор: DINA MUGAM TV
Загружено: 2026-01-28
Просмотров: 22
Описание:
செங்கம் ரிஷபேஷ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாறு கரையில் அமைந்துள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அனுபாம்பிகை சமேத சுயம்பு ஸ்ரீ ரிஷபேஷ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா ஆன்மீக ஒளியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
செங்கம் பகுதியின் முக்கிய ஆன்மீக மையமாக விளங்கும் இந்த ஆலயத்தில் ரிஷபேஷ்வரர் சுயம்பு சிவபெருமானாக அருள்பாலித்து வருகிறார்.
மஹாகணபதி ஹோமம், கோ பூஜை, மஹா வாஸ்து சாந்தி உள்ளிட்ட வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் செய்து புதிதாக உருவாக்கப்பட்ட ரிஷப வாகனத்துடன் கரிக்கோல ஊர்வலம் பக்தர்களின் திரளான பங்கேற்புடன் நடைபெற்றது.
மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மீன லக்கினத்தில் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களில் பொருத்தப்பட்ட கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து புனித நீர் ஊற்றினர். சுயம்பு ரிஷபேஷ்வரர், தாயார் அனுபாம்பிகை, வள்ளி–தெய்வானை சமேத முருகன், காசி விஸ்வநாதர், நவகிரகங்கள், நந்தி மண்டபம் என வரிசைப்படுத்தப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.
“ஓம் நமசிவாய” மந்திர ஒலிகள் முழங்க ஆலய வளாகம் முழுவதும் ஆன்மீகக் களைகட்ட, செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் புனித நீர், அன்னதான பிரசாதம் பெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை சுவாமி – அம்பாள் திருக்கல்யாண உற்சவமும், இரவு புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், விழா குழு தலைவர் வழக்கறிஞர் கஜேந்திரன், இந்து சமய அறநிலைத் துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
நாளை முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமுகம் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக மண்டல தலைமை செய்தியாளர்
T.குருபரன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: