அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு தரும் சிவபெயர்ச்சி தவறவிடாதீர் தாயுமானவர் குருபூஜை Sivapeyarchi
Автор: nam azhagiya aanmeegam
Загружено: 2026-02-09
Просмотров: 909
Описание:
#thaisomavaram #shivapeyarchi #sivapeyarchi #shiva #visakam #thayumanavar #thiruneelakantar
இன்று தைகடைசி #சோமவாரம்- #சிவபெயர்ச்சி
அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு தரும் நாள் தவறவிடாதீர்!
தைமாத #விசாகம் நக்ஷத்ரம்
#தாயுமானவர் ஸ்வாமிகள்,
#திருநீலகண்டநாயனார் குருபூஜை
இன்று தை மாத கடைசி சோமவாரம்.
#திங்கட்கிழமை பரமேஸ்வரனுக்கு ரொம்ப உகந்த நாள்.
சிவபெருமான் தனது கோபத்தை குறைத்து சாந்த ரூபமாக மாறிய முக்கியமான நாள் தை மாதம் கடைசி திங்கட்கிழமை.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்து அம்ருதம் உருவாகும் போது வாசுகி கக்கிய கொடிய ஆலகால விஷத்தை பரமேஸ்வரன் உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது.
ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதைக் கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்.
பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமான ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினம் இந்த தை மாதம் கடைசி திங்கட்கிழமை.
அதனால் இன்று சிவாலயம் சென்று சிவனை வணங்கினால் பகவானின் அருள் பூரணமாக கிடைக்கும். தடைகளை விலகும் என்பது நிச்சயம்.
இந்த காலத்தில் பலருக்கு மன அழுத்தம் , கடன் பிரச்சினை, நோய்கள் என பல விதமான பிரச்சினைகள் .
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தை மாத கடைசி சோமவாரம் சிவ ஆலயம் தரிசனம்.
ஏழரை சனி, அஷ்டம சனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதம் கடைசி திங்கட்கிழமை.
அனைத்து ராசியினரும் இன்றைய தினம் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும்.
சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். மனம் அமைதி பெறும். கோபம் குறையும் , வீட்டில் அமைதி தங்கும்
இன்றைய தினம் தை கடைசி திங்கட்கிழமை
இன்றைய தினம் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தாலோ செய்வதைப் பார்த்து வணங்கினாலோ சனியால் நேர்ந்த சங்கடங்கள் நீங்கும்.
#சிவப்பெயர்ச்சிக்கு சிறப்புப் பெற்ற ஒரு சிவஸ்தலம்
#மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள #ஸ்ரீமஹாபலீஸ்வரர் சிவன் கோவில்
பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.
#மஹாபலிச்சக்கரவர்த்தி இழந்த செல்வம், புகழ், சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலம். வாய்ப்பு கிடைக்கும் போது இந்த சிவ ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.
பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது.
மேலும் தகவலுக்காக தொடர்புக்கு
+91 9245773871
பஸ் ரூட் : மயிலாடுதுறை TO திருவாரூர் சாலையில் மஞ்ச வாய்க்கால் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் கிழக்கு புறம் புற சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீமஹாபலீஸ்வரர் ஆலயம் உள்ளது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: