வாழை மர நாரில் கூடை தயாரிக்கும் முறை. அசத்தும் பெண்கள். முழு வீடியோ பார்க்க
Автор: Nijam Tv News
Загружено: 2021-11-19
Просмотров: 12666
Описание:
பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நெல்லை மாவட்ட ஆட்சியர்.
நெல்லை மாவட்டத்தில் வேலை இல்லாத பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி அளித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் வாழை நாரில் கூடை தயாரிப்பு பயிற்சி நிறுவனம் சுத்தமல்லி பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியார் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கபட்டது. இந்த பயிற்சி நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் வாழை நாரில் கூடை தயாரிப்பது எவ்வாறு என்ற பயிற்சியினை கடந்த 3 மாதங்களாக பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வருகை தந்தார். தொடர்ந்து பயிற்சிபெறும் பெண்களிடம் பயிற்சி குறித்த விவரங்களை கேட்டறிந்தார். வாழை நாரில் கூடை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை தங்குதடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் பயிற்சி நிறுவன நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், முத்துகிருஷ்ணன், இன்ஜினியர் செண்பகவள்ளி, மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் ராமர், மானூர் வட்டார மேலாளர் ரமேஷ், சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன், கிராம உதவியாளர் மேலவாசி, சுத்தமல்லி பஞ்சாயத்து தலைவர் மேனகா, சுத்தமல்லி பஞ்சாயத்து கிளார்க் சுரேஷ், சுத்தமல்லி பஞ்சாயத்து 3வது வார்டு கவுன்சிலர் ஜாகீர்கான், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: