Welcome Address by President of Krish Tamil Sangam | Part 6
Автор: Sri Krish International School
Загружено: 2019-09-30
Просмотров: 46113
Описание: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ் சர்வதேசப் பள்ளியில் தமிழின்றி தமிழர்க்குச் சிறப்பில்லை என்ற நோக்கில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறியவும், நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களை தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல “கிருஷ் தமிழ்ச் சங்கம்” உருவாக்கி அதில் தமிழின் மேன்மையை பறைசாற்றும் விதமாக திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, மாறுவேடப்போட்டி, கவிதைப்போட்டி, தமிழ் இசைப்போட்டி, நீதிக்கருத்தைக் கூறுதல், படம் பார்த்துக் கருத்துக்களை வெளிப்படுத்துதல், திருவள்ளுவர் ஆத்திசூடி போன்ற பல்வேறு போட்டிகள் (07/09/19) அன்று நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிருஷ் தமிழ்ச் சங்க விருது - 2019 விழாவில் சிறப்பு விருந்தினரான சாகித்ய அகாடமி விருது பெற்ற கலைமாமணி “ஈரோடு தமிழன்பன்” அவர்களின் முன்னிலையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குக் கேடயமும், சான்றிதழும் (14/09/2019) அன்று வழங்கப்பட்டன. மேலும் பள்ளிகளையும், மாணவர்களையும், ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களில் அதிக கேடயங்களை பெற்றுள்ள “ஸ்ரீ கிருஷ் சர்வதேசப் பள்ளிக்கு” 2019 ஆம் ஆண்டிற்கான “கிருஷ் சிற்பிகா விருது” வழங்கியும், நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற மாணவி இரண்டாம் வகுப்பைச் சார்ந்த சிவ பார்கவி, நான்காம் வகுப்பைச் சார்ந்த விக்ரந்த், ஒன்பதாம் வகுப்பைச் சார்ந்த அர்ச்சனா ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான “கிருஷ் வியன்கா விருதும்”, ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கி ஸ்ரீ கிருஷ் சர்வதேசப் பள்ளித் தலைவர் பாராட்டிச் சிறப்பித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: