முசிறி நாட்டு 32 கிராமங்கள்... பட்டுக்கோட்டை அருகே சுவாரஸ்ய பின்னணி.
Автор: Naalai Namadhe News
Загружено: 2021-08-07
Просмотров: 2519
Описание:
முசிறி நாட்டு 32 கிராமங்கள்
இப்படி ஒரு வார்த்தை பட்டுக்கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தம்.
பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட முசுகுந்த சோழன் சங்ககாலத்திற்கு முந்தைய சோழ அரசனாவான். இவனைப் பற்றிச் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த முசுகுந்த சோழனால் நிர்மானிக்கப்பட்டு சைவவேளாளர்களிடம் கையளிக்கப்பட்ட நாடு முசுகுந்த நாடு.
தற்ப்போதைய பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள 36 வெள்ளாள கிராமங்களும் மற்றும் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 3 கிராமங்களும் முசுகுந்த நாடு ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இதன் தலைநகரம் முசிரி ஆகும். இங்கு முசுகுந்த சோழனால் கட்டப்பட்ட சிவனாலயம் இன்றும் உள்ளது.
இவ்வாலயம் முசிரி கைலாசநாதர் கோவில் என்று அழைக்கபடுகிறது.
ஒருமுறை முசுகுந்த சோழனுக்கு தீராத தோல் நோய் ஏற்ப்பட்டதாகவும்,நாட்டில் உள்ள மருத்துவர்கள் பலர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனதாகவும் பிறகு, அமைச்சர்களின் ஆலோசனைப்படி பல புன்னிய தலங்களுக்கு சென்றதாகவும் அப்பொழுது, இராமேஷ்வரம் செல்ல தீரமாணித்து தற்போதைய முசுகுந்த வளநாடு வழியாக சென்றதாகவும் தற்போதைய முசுகுந்த நாடு பெரிய வனப்பகுதியாக இருந்ததாகவும் களைப்பினால் வீரர்களும் அரசனும் ஓய்வெடுத்தபோது , முசுகுந்தன் ஒரு காட்சியை கண்டதாகவும் " ஒரு தோல் நோய் கண்ட நாய் சேருநிறைந்த நீரில் நீராடி அதன் தோல் நோய் நீங்கி சென்றது" இதனை கண்ட முசுகுந்தன் அந்த சேற்றில் குளித்து தன்னுடைய நோய் நீங்கி சுகம கண்டதாகவும் வீரர்களுக்கு நான் இராமேஷ்வரம் சென்று திரும்பி வருவதற்க்குள் இந்த இடத்தில் தீர்த்த குளம் உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு சென்றதாகவும்
பிறகு, இராமேஷ்வரம் சென்று வந்து அங்கு ஆலயம் எழுப்பியதாகவும்
அந்த கோவிலையும் அந்த பகுதியினையும் நிர்வகிக்க பூம்புகார் நகர சைவ வேளாளர் குடும்பம் நான்கு பேரையும் வீரர்களையும் கொடுத்து தனி சோழவள நாடாக நிர்மாணித்தாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கிறது.
இன்னொரு வகையான செய்தியும் கூறப்படுகிறது...
தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழனுடைய முதன்மை படைத்தளபதி ஆலத்தூரை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ண வேலானுக்கு..ராஜராஜ சோழனால் பரிசளிக்கப்பட்ட சிவாலயம் மற்றும் நிலப்பகுதிகள் இது என்றும் வரலாற்றுச் செய்திகளில் கூறப்படுகிறது.
இந்த முசிறி கோவிலை தலைமையிடமாகக் கொண்டு முசுகுந்த 32 பின்னாளில் 36,38 என குறிப்பிடப்படுகிற நாட்டு மக்கள் தன் உறவுப் பாலத்தை வலுப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
சமுதாய கட்டமைப்பு மற்றும் ஏனைய பிரச்சனைகளை விவாதிக்கக் கூடிய இடமாக இக்கோவிலை பயன்படுத்தி வந்துள்ளனர் வேளாளர் இன மக்கள்.
ஆறு பிடாகைகளாக பிரிவுகள் கொண்ட முசுகுந்த நாட்டு வேளாளர் சமூகத்தினர் வேளாண் தொழிலை பிரதானமாக கொண்டவர்கள், பின்னாளில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பை அதிகப் படுத்திக் கொண்டனர்.
பட்டுக்கோட்டைத் தொகுதியின் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று சமூகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பண்பாடு கலாச்சாரம் கிராம கட்டமைப்பு நாட்டு பஞ்சாயத்து என ஆகச்சிறந்த அம்சங்கள் இச்சமூகத்தின் சிறப்பு.
முசிறி நாட்டு முசுகுந்த வேளாளர் சமூகத்தினர் மத நல்லிணக்கத்திற்கும், மானுட ஒற்றுமைக்கும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: