4 best tourist places in nagercoil
Автор: OUR SOCIETY CHANNEL
Загружено: 2024-12-08
Просмотров: 1972
Описание:
கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள்
• Kanyakumari Best Tourist Places #tamil
3 best tourist places to visit in tirunelveli
• 3 best tourist places in tirunelveli#travel
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
திற்பரப்பு நீர்வீழ்ச்சி பரப்பு நீர்வீழ்ச்சி என்பது (Tirparappu Waterfalls) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.திற்பரப்பு அணை கோதையாறு திட்டத்தின் கீழ் 1951-இல் திற்பரப்பில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணையால் 358.9 கெக்டேர் நிலப்பரப்பு பாசனம் அடைகிறது
மாத்தூர் தொட்டிப் பாலம்
மாத்தூர் தொட்டிப் பாலம் (Mathoor Aqueduct) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத் தலமுமாகும்.தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப் பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. வறட்சியை தீர்ப்பதற்காக 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969இல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது.இந்தப் பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1,204 அடியாகவும், தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. இது திருவட்டாரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது.
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது கேரளா அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது, கேரள அரசின் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படுகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான வேளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த அரண்மனையானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் பொ.வ 1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும், தற்போது உள்ள முழு அரண்மனையும் அவரால் கட்டப்பட்டதல்ல. அரண்மனையின் முகப்பில் இருக்கும் தாய் கொட்டாரம் என அழைக்கப்படும் பகுதி மட்டுமே அவரால் கப்பட்டடதாக கூறப்படுகிறது. அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவரின் மருகமனான அனிழம் திருநாள் மாராத்தாண்ட வர்மா காலத்தில் இந்த அரண்மனை விரிவுபடுத்தப்பட்டது. கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தக் கட்டமானது காலம்காலமாக புதுப்பிக்கபட்டுவந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையின் எல்லா பகுதிகளிலும் இயற்கை ஒளியை பயன்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.
tamil#padmanabhapurampalace#vivekanandarockmemorial#kumariammantemple#gandhimandapam#thiruvalluvarstatue#sanguthuraibeach#thirparappuwaterfalls#tour#kanyakumarisunrisepoint#கன்னியாகுமரி#kanyakumari#kanyakumaribeaches#kanyakumaritour#kanyakumaritouristspots#kanyakumaritouristattractions#kanyakumari#suchindramthanumalayantemple#balajitemplekanyakumari#tirupathitemplekanyakumari#bhagavathitemple#durgatemplekanyakumari#kanyakumarilighthouse#kanyakumarisunrisesetpoint#vattakottaifort#vattakottaifortbeach#வட்டக்கோட்டை#kanyakumari#kanyakumaribeaches#kanyakumaritour#kanyakumaritouristspots#kanyakumaritouristattractions#vattakottaikanyakumari#tour#nagercoiltouristplaces#பத்மநாபபுரம்அரண்மனை#திருவட்டாறுஆதிகேசவப்பெருமாள்கோவில்#மாத்தூர்தொட்டிப்பாலம்#mathurthottipalam#mathurhanginbridge#adikesavaperumalkovil#திற்பரப்புநீர்வீழ்ச்சி#waterfalls#kanyakumariwaterfalls#nagercoilwaterfalls#thirparappuwaterfalls#tiruparapuwaterfallskanyakumari#thiruparappuwaterfalls#vlog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: