The Final Submission | Thanthathu nee andro | தந்தது நீயன்றோ | Pavithran Kalaiselvan| Murugan sivan
Автор: Pavithran Kalaiselvan
Загружено: 2025-11-18
Просмотров: 93
Описание:
தந்தது நீயன்றோ தண்டமிழ் சொற்சரம்
வந்தது என்கைவழி வெண்முகில் தன்துளி
சிந்திடல் போன்றார்போல் செந்தமிழ் நற்கவி
தந்தது நீயன்றோ தென்பதிச் சோதியே.
கந்தனை பாடாது கற்பனை தான்தரும்
சிந்தனை சேராது சித்தமும் நாதமும்
சொந்தமும் ஆகாது செஞ்சுடர் ஈசனின்
பந்தமும் கூடாது பாவியென் பாவமோ
என்மனக் குளமிருந்து எண்குண தவமிருந்து
நன்னயத் தமிழமுது நல்கிட வகைதருக
சின்மயத் தலைமுதல்வன் சித்சபை திகழ்பரமன்
தன்மயத் திருந்திடவே தென்தமிழ் தந்தருள்க
என்னுயிர் தோழமையே வெல்வகைமை தந்தருள்க
முன்வினை மூண்டெழுமுன் முந்திவந்து கைதருக
பின்வரும் தீவினையை போவெனவே ஓட்டிடுக
என்பிறவி வாழ்வனைத்தும் என்குருவாய் நீவருக.
அன்றுனையும் நானறியேன் ஆனவழி தானறியேன்
அன்றெனது நாவிருந்து ஆறுமுகம் தான்விருந்து
இன்றெனையும் வீணெனவே ஈனமென்று விட்டனையோ
நன்றெனது பாழ்மனந்தான் நீயிருந்த வீடிலையோ
கண்ணிருந்தும் நான்குருடாய் கண்டபடி திரிந்திருக்க
விண்ணிருந்து நீஉனக்கும் வேண்டுமென மறைந்திருக்க
வண்ணமயில் வாகனனே வாழ்வனைத்தும் உன்கடனே
எண்ணமின்றி நீதனியே என்னுயிரை விட்டனையோ
நானழுத நேரமெல்லாம் நீயொதுங்கி போனதுதான்
வானழுத நீரனைத்தும் வீார்த்ததுயென் கண்கடல்தான்
தேனமுதை வேண்டிலன்நான் தேடியது வாழ்வினைதான்
ஈனமெனப் போவதற்குள் ஈருலகில் நீயுதவு
பட்டதுயர் பாடமென்றேன் போதுமிந்த பேரறிவு
நட்டவிதை நான்வளர நல்லமழை நீதருக
இட்டமொடு பாட்டெழுதி ஈசனனுனை பாடிடவே
வட்டபுவி தான்வணங்கும் வாழ்வதனை நீவழங்கு
இன்றெனதும் வாழ்வினையுன் திருவடியில் வைத்தழுதேன்
நன்றதுவும் தீயதுவும் நின்கரத்தில் தான்வழங்கு
மன்றமது வாழ்த்திடுமோ மானமதை வாங்கிடுமோ
இன்றுனது கையிருப்பு இன்பமதே என்விருப்பு
உன்மனத்து போக்கில் என்கதை எழுதிடு
உன்கரங்கள் போக்கில் என்வழி செலுத்தி
நன்நிலையோ தீதோ நின்னருள் எனவே
இன்னொருசொல் பேசாது இன்பமாய் கிடப்பேன்..
#murugan #vela #lordmurugan #muruganslogasmanthras #hindugod #hindudeity #lordshiva #aisongs #skanda #song
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: