மகாராஷ்டிரா மாநிலம் ஜெல்கோனில் PeaceBuildersForum மாநாட்டில் துவக்க உரை-உலக அமைதி தூதுவர் குருமகான்
Автор: Santhosam
Загружено: 2026-03-09
Просмотров: 892
Описание:
06.03.2026 அன்று “உலக அமைதி தூதுவர்” குருமகான் அவர்களின் ஜென்ம நட்சத்திரமான திருச்சித்திரை தினத்தை முன்னிட்டு தென்கைலாயம், திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான ஆலயத்தில் சிறப்பு தவம் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள், மெய்ஞான ஆசிரியர்கள், மெய்ஞான செல்வர்–செல்வியர்கள் மற்றும் சிங்கப்பூர் மெய் உணர்வாளர்கள் கலந்து கொண்டு குருமகான் அவர்களின் அருளாசியை பெற்றனர்.
முழு நல வாழ்விற்கான மகா சக்தி யோகப் பயிற்சி மார்ச் 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக சமாதான ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு குருமகான் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குருமகான் அவர்கள் உலக மகளிர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தார். திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லூரியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம் ஜெல்கோனில் நடைபெற உள்ள Peace Builders Forum India மாநாட்டில் கலந்துகொண்டு துவக்க உரை ஆற்றுவதற்காக குருமகான் அவர்கள் மற்றும் உலக அமைதி குழு கோவை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் உலக அமைதி மற்றும் மனித நலன் குறித்த குருமகான் அவர்களின் அருளாசியும் வழிகாட்டுதலுடனும் சிறப்பாக நடைபெற்றன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: