ஆதிரை பெண்ணே..திருவாதிரை நட்சத்திரத்தின் கதை
Автор: SKY TUBE TAMIL
Загружено: 2018-12-16
Просмотров: 40285
Описание:
சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான்.
இவன் பொன் பொருட் செல்வத்தில், பெரிய பணக்காரன். இவனது மனைவியின் பெயர் ஆதிரை. கற்புக்கரசி.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்தி வந்தான் சாதுவன்.
ஒரு சமயம், தனியாக நாடகத்திற்குச் சென்றிருந்தபோது, அதில் நடித்த நடிகையின் அழகைக் கண்டு மயங்கினான்.
அம்மயக்கம், அவள் மீது காதல் கொள்ளச் செய்தது. ஆதலால் அவளது வீட்டிலேயே இவன் தங்கி இருந்து விட்டான்.
அந்த நடிகையோ, சாதுவனின் வசதியைத் தெரிந்து கொண்டு, பணம், பொருளைப் பறித்துக் கொண்டிருந்தாள்.
ஒருகாலகட்டத்தில், அவனுக்கு வசதிக் குறைவு ஏற்படவும், அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.
மனைவிக்கு துரோகம் இழைத்ததால்தான், தனக்கு இந்தக் கதி ஏற்பட்டு விட்டது என்று எண்ணி வருந்தினான் சாதுவன்.
வீட்டிற்குத் திரும்பிப் போகவும் அவன் மனம் இடங்கொள்ளவில்லை.
இழந்த பொருளுக்கு ஈடாக பொருளை ஈட்டிய பின்னரே, தான் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அதற்காக சம்பாதிக்கும் வழிகளை அலசி ஆராய்ந்தான்.
அந்தநேரத்தில், வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள், காவிரிப்பூம் பட்டிணம் வந்திறிங்கினார்கள்.
அவர்களுடன் சாதுவன் இணைந்து, வியாபார நுணுக்கங்கள் குறித்து சாதுவன் பேசினான்.
சாதுவனின் யோசனைகள் வியாபாரிகளுக்குப் பிடித்துப் போய்விட்டது. சாதுவனை தங்களுடனே கூட, பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.
கப்பல் சென்று கொண்டிருந்த போது, பயங்கரப் புயல் அடித்தது.
கப்பல் கவிழ்ந்தது.
கப்பலில் வந்த வியாபாரிகள் பலர், கடலில் மூழ்கி இறந்து போயினர்.
சாதுவனும் கப்பலிலிருந்து தூக்கி வீசப்பட்டு, கப்பல் உடைந்து கடலில் மிதந்த பாகங்களில் ஒன்று மிதந்திருக்க, அதனைப்பற்றிக் கொண்டு உயிரைக் காப்பாற்ற மிதந்தான்.
உடைந்த கப்பல் பலகையின் ஒன்றின் மீதேறி படுத்துக் மிதந்து கொண்டு, யாராவது கடல்வழிப் பயணமாக உதவிக்கு வரமாட்டார்களா? என்று பார்த்து மிதந்து கொண்டிருந்தான் சாதுவன்.
நான் இப்போது இறந்து போனால், மனைவியிடம் தனக்கு உண்டான கெட்ட பெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே? என நினைத்து நினைத்து வருந்தினான்.
இவனின் மனைவி ஆதிரையோ, ஈசன் மீதும், கணவன் மீதும், நீங்காத பெரும் அன்பு கொண்டிருந்தவள்.
கணவன் எங்கே இருந்தாலும் நல்லபடியாக இருக்கட்டும் என்று, தினமும் ஈசனிடம் வேண்டிக் கொள்ளாத நாளே இல்லை.
இது, நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடும் அதுதானே!.
ஆதிரை பிரார்த்தனையின் பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக ஒரு ஓரமாக கரை ஒதுங்கியது.
சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கிப்போன செய்தியும் ஆதிரையின் செவிக்கு எட்டியது.
கணவன் இறந்து விட்டான் என முடிவு செய்த ஆதிரை, அவரின்றி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என அழுது புலம்பி, தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.
இறைவா!" அடுத்த பிறவியிலும் என் கணவரே எனக்கு கணவராக வர வேண்டும் என்று வேண்டியபடி தீயினுள் புகுந்து குதித்தாள்.
அக்னிப் பிழம்புகள் அவளை ஒன்றும் செய்யவில்லை.
அவள்தான் கற்புக்கரசியாயிற்றே, ஆதலால் அவளைத் தீ சுட்டுணர்த்தவில்லை.
ஐயோ!, நெருப்பு கூட என்னைத் தீண்ட முடியாத பாவியாகிப் போனேனே!" என மேலும் கதறி கதறி அழுதாள்.
ஆதிரை!------------"
அப்போது வானிலிலிருந்து ஒரு அசரீரி.......
அம்மா ஆதிரையே! கவலை வேண்டாம், உன் கணவர் உன்னிடம் வந்து சேர்வார் என்றுது.
அங்கோ..... கரையில் ஒதுங்கிய சாதுவனைக் கண்ட அந்நாட்டுக் காவலர்கள், சாதுவனை அழைத்துக் கொண்டு போயினர் அந்நாட்டு அரசனிடம்.
அரசனிடம், தன் கதை முழுவதையும் எடுத்துரைத்தான் சாதுவன்.
பின் அவனுக்கு உணவைக் கொண்டு வரச்சொல்லி விட்டு, இதலில் இதைக் குடி என்று மதுவைக் கொடுத்தான் அரசன்.
சாதுவன் மதுவை அருந்த மறுத்தான்.
மது அருந்தும் பழக்கத்தாலே, தனக்கு ஏற்பட்ட தீமைகளை விளக்கிச் சொன்னான் சாதுவன்.
ஆனால் அரசரோ, நாம் மகிழ்ச்சியான குதூகலத்துடன் இருப்பதற்காகத்தானே கடவுள் மதுவைப் படைத் திருக்கிறார்.
அப்படிப்பட்டதை ஏன் சாப்பிட மறுக்கிறாய்? ம்.. சாப்பிடு என்றார்.
அரசே… மதுவின் மயக்க பழக்கத்தால் அது விளைவித்த பயனால், நான் தாலி கட்டிய மனைவியை விட்டுப் பிரிந்து, தாலிகட்டிக் கொள்ளாத நடன மாதுவிடம் சென்று சிக்கிச் சீரழிந்தேன்.
தாலி இல்லாத வாழ்க்கையுடன் இருந்த அவளோ என்னிடமிருந்து பொன், பொருள் அபகரித்து, வசதி குறையவும் என்னைவிட்டு அகழ்ந்து சென்று விட்டாள்.
அந்த மதுவினாலே மானத்தையும் இழந்தேன். குடும்பத்தை இழந்தேன். பொன் பொருளை இழந்தேன். நிம்மதியை இழந்தேன். கற்புக்கரசியான என் மனைவியைப் பிரிந்தேன் என்றான்.
குடும்பக் கெளரவுமும், தன்மானமும் நீங்கிப் போகும். இதை என் அனுபவம் எனக்கு உணர்த்தியது என்று மதுவின் தீமையை எடுத்துக் கூறினான் அரசனிடம்.
இதைக்கேட்ட மன்னரும் மனம் திருந்தினான். மது பழக்கத்தை ஒழிக்க ஆணை பிறப்பித்தார்.
அவரது உதவியுடன் நாடு திரும்பிய சாதுவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ்ந்தான்.
அந்தக் கற்புக்கரசியானயானவளே ஆதிரை. அந்த ஆதிரையே திருவாதிரை நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள்.
சிவபெருமான் அதை, தன் நட்சத்திரமாக ஏற்றதுடன், அந்நாளில் மகிழ்வுடன் நடனமாடி, நடராஜர் எனும் திருநாமமும் பெற்றார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: