மதுமலர் நிறைகொடி
Автор: பாரம்பரிய கத்தோலிக்கப் பாடல்கள்
Загружено: 2018-07-06
Просмотров: 26272
Описание:
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறை சூசை மாமுனியே
துதி வளர் உமது நற்பதம் வந்தோம்
துணைசெய் தெம்மையாளும் தாதையரே
1. வான் உலகிழந்ததால் கர்வமுற்ற
வன் மனக்கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்
2. ஒளி நிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடி புனைந்த
துளி நிகர் அருள் பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணை புரிவாய்
3. தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: