ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது
Автор: trichy malar24x7
Загружено: 2026-01-31
Просмотров: 263
Описание:
ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் 10 நாட்கள் நடைபெறும் தைத்தேர் உற்சவம் கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . தொடர்ந்து
உற்சவ நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஹம்ச வாகனம், யாழிவாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது..
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேர் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் உபநாச்சியார்கள் புறப்பட்டு தனித்தனியே தேருக்கு வந்தடைந்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தை தேரில் உப நாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனை தொடர்ந்து நான்கு உத்தர வீதிகளிலும் தேரை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா என கோஷமிட்டுவாறு வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்தனர் .
திருச்சி மற்றும் திருச்சியை சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்ததால் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டிருந்தது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: