NOT A CHILD'S PLAY - EVERWIN PRINCIPAL'S TALK (HELLO DEAR EVERWINNERS - 124)
Автор: Everwin school
Загружено: 2026-02-18
Просмотров: 1912
Описание:
அன்புள்ள எவர்வின்னர்களுக்கு வணக்கம், உங்களுக்கு என் ஆசிகள்.
நான் இன்று ராஜமங்கலம் எவர்வின் குளோபல் கிட்ஸ் பள்ளியில் இருந்து பேசுகிறேன். இங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. தேர்வை எழுதும் மாணவர்கள் அனைவரும், எல்லா பாடங்களிலும் வெற்றி பெற, நான் வாழ்த்துகிறேன். பொது தேர்வுகளை எழுதும் மாணவர்களை நாம் குழந்தைகள் என்று அழைத்தாலும் இனி அவர்கள் குழந்தைகள் அல்ல. இதைப்பற்றிதான் இன்றையத் தலைப்பு. "நாட் எ சைல்ட்ஸ் ப்ளே" - இது ஆங்கில மொழியில் பிரபலமான ஒரு சொற்றொடர். இதன் அர்த்தம் "குழந்தை விளையாட்டாக அல்லாமல் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பதுதான்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை மற்றும் குறைந்த வளம் கொண்ட நாட்டில், குழந்தை பருவத்தை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். வயது அதிகரிக்கும் போது, கடமைகளும் பொறுப்புகளும் அதிகரிக்க வேண்டும். இப்போது நம் பொது அறிவுக்காக, பல்வேறு வயது மற்றும் நிலைகளை சார்ந்த குழந்தைகளை எவ்வாறு அழைப்பது என்று உங்களுக்கு கூறுகிறேன்:
0 முதல் 3 மாதங்கள் - நியூ பார்ன் (புதிதாக பிறந்த குழந்தை)
0 முதல் 1 வயது - இன்ஃபேண்ட் /பேபி (கைக்குழந்தை)
1 முதல் 3 வயது - டாட்லர் (மழலை)
3 முதல் 5 வயது - ப்ரீஸ்கூலர் (பாலர்)
6 முதல் 12 வயது - சைல்ட் (குழந்தை)
13 முதல் 19 வயது - டீனேஜர் (பதின் பருவத்தினர்)
20 முதல் 24 வயது - யூத் (இளைஞர்)
25 வயதிற்கு மேல் பொறுப்புகளும், கடமைகளும், பணிச்சுமைகளும் தானாகவே உருவாவதால், அந்த வயதினரை இளைஞர்கள் என்று கூற முடியாது. எனவே "நாட் எ சைல்ட் பிளே" என்றால் நம் வயது அதிகரிக்கும் போது வேடிக்கையான, குழந்தைத்தனமான விஷயங்களை செய்ய முடியாது என்று அர்த்தம். உங்கள் வேலைக்கு மற்றவர்களை சார்ந்து இருக்க முடியாது.
சைக்கிள் ஓட்டுதலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். நீங்கள் குழந்தைகளாக இருக்கும்போது, பயிற்சி சக்கரங்கள் பொருத்திய சைக்கிள்களை ஓட்டுவீர்கள். பயிற்சி சக்கரங்கள் உங்களை சமநிலைப்படுத்தவும், கீழே விழாமல் காக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அது நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. உங்களுக்கு 10 முதல் 15 வயதாகும் போது, பயிற்சி சக்கரங்கள் அகற்றப்படுகின்றன. நீங்களாக உங்களை சமநிலைப்படுத்தத் தொடங்கி விடுவீர்கள். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும், உங்கள் பயிற்சி சக்கரங்களை அகற்றி தானாக சமநிலைப்படுத்திக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது. அதனால் தான் நம் பள்ளிகளில், ஏழாம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களை மட்டும் பள்ளிக்கு சைக்கிளில் வர அனுமதிக்கிறோம்.
வேறு என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? கேஜி குழந்தைகளின் புத்தகப் பையை எடுத்துப் பாருங்கள். இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் மற்றும் ஒரு உணவு பாத்திரம் மட்டும் இருக்கும். அவ்வளவுதான். அதை ஒரு 9 அல்லது 10 ஆம் வகுப்பு மாணவரின் புத்தகப் பையுடன் ஒப்பிட்டு பாருங்கள். வயது அதிகரிக்கும் போது பணிச்சுமையும் அதிகரிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிறு குழந்தைகள் அனைவரும் நுகர்வோர், அவர்களால் எந்த பலனையும் வழங்க முடியாது. ஆனால் ஏழாம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்களிப்பாளர்கள். அவர்கள் எப்போதும் வேடிக்கையாக இருக்க முடியாது. அவர்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். இனிமேலும் அவர்கள் குழந்தைகள் அல்ல.
சிறு குழந்தைகள் விளையாட்டை மையமாகக் கொண்டவர்கள். அவர்கள் வளரும்போது, நோக்கத்தை மையமாகக் கொண்டவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகளின் பிரச்சனை இதுதான்.
மூன்று அல்லது நான்கு வயதில் குழந்தைகள் பொம்மை மொபைல் போன் உடன் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள். அது பார்ப்பதற்கு அழகாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். ஆனால் 13 வயதில் உங்களிடம் உண்மையான மொபைல் போன் இருக்கும்போது, நீங்கள் அவ்வாறு நீண்ட நேரம் விளையாட முடியாது. அது ஆபத்தானது. நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை அது கெடுத்து விடும். எனவே சிறு குழந்தையாக இருப்பதற்கும், வளர்ந்த குழந்தையாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நான் குழந்தையாக இருந்த போது, அவ்வாறு நடத்தப்படவில்லை. அதிகாலையில் விவசாய வேலைக்கு செல்வது, பகலில் பள்ளிக்கு செல்வது, பின்னர் மாலையில் விவசாயப் பொருட்களை விற்று, என் குடும்பத்தின் வருவாயை பெருக்குவதற்காக சந்தைக்கு செல்வது என்று பயன்படுத்தப்பட்டேன். நான் குழந்தையாக இருந்தபோது கூட, வேலை செய்து கொண்டிருந்தேன்.
ஆனால் நகரங்களில் அவ்வாறு இல்லை. குழந்தைப் பருவ இன்பங்களை நீங்கள் இழக்கக்கூடாது. அதே நேரத்தில் உங்கள் பொறுப்பும் அதிகரிக்க வேண்டும். நீங்கள் காத்தாடியை போன்றவர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்கள் நூலை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது, உங்கள் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக அந்த நூலை பிடித்துக் கொள்வார்கள். பிறகு சிறிது சிறிதாக விட்டு உங்களுக்கு பறக்க பயிற்சி அளிப்பார்கள். வயது அதிகரிக்கும் போது உயரமும் அதிகரிக்கும். காத்தாடி மேலும் உயர்ந்து பறக்கும். பலத்த காற்று மற்றும் பல சவால்களை எதிர்கொள்ளும். ஆனாலும் அது தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும். ஆஹா, என்ன ஒரு அழகான உருவகம்!
இப்போது தலைப்பிற்கு செல்வோம்.
குழந்தை விளையாட்டு அல்ல
நீண்ட காலம் குழந்தை பருவத்திலேயே தஞ்சம் அடைய வேண்டாம்.
வேடிக்கையான வாழ்க்கையில் இருந்து தீவிரமான வாழ்க்கைக்கு மாறுங்கள்.
ஒவ்வொரு வருடமும் உங்களின் கவனத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்துங்கள்.
இப்போதைக்கு இவ்வளவுதான். தொடர்ந்து முன்னோக்கி செல்லுங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: