thirukural Tamil | திருக்குறள் | நட்பு | full test | syllabus wise test no 9 | natpu
Автор: Tnpsc Hashtag
Загружено: 2022-04-09
Просмотров: 2099
Описание:
where to study :
8th Tamil new book iyal 8 ( or)
8th old book term 1 iyal 1
நட்பு அதிகாரம்
1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
குறள் விளக்கம்:
நட்பினைப்போலச் செய்துக்கொள்வதற்கு அரிய உறவுகள் எவையும் இல்லை. அந்நட்பினைப் போல செய்கிற செயலுக்கு சிறந்த பாதுகாப்பு வேறு எவையும் இல்லை.
2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
குறள் விளக்கம்:
அறிவுடையவரின் நட்பு வளர்பிறை போல நாளும் வளரும் அறிவில்லாதவரின் நட்போ தேய்பிறை போல நாளும் தேயும்
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
குறள் விளக்கம்:
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
4. நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
குறள் விளக்கம்:
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பனிடம் தீய செய்கை கண்டபோது, முற்பட்டு சென்று கண்டித்து அறிவுரை சொல்லுதற்கேயாகும்.
5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
குறள் விளக்கம்:
இருவர் சேர்ந்து இருத்தலும், நெருங்கி பழகுதலும் நட்பாகாது. இருவர்தம் ஒத்த மன உணர்வே நட்புரிமையைக் கொடுக்கும்
6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
குறள் விளக்கம்:
ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று, அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்.
7. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
குறள் விளக்கம்:
நட்பாவது, கெட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதேயாகும்.
8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
குறள் விளக்கம்:
ஆடை உடலைவிட்டு நழுவும்போது கை அதைப்பிடிப்பதற்கு விரைந்து செல்வதுபோல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
குறள் விளக்கம்:
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்
10. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
குறள் விளக்கம்:
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து சொன்னாலும் நட்பு சிறுமையாய்த் தோன்றும்.
#tnpsc #fulltest #group4 #tamil #group2tamil #tamil #newsyllabus #question
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: