ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan

Автор: KULUKKAI

Загружено: 2020-06-18

Просмотров: 50488

Описание: வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக்கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கீழ்க்காணும் கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்த பதில்களின் முதல் பகுதி. இரண்டாவது பகுதி நாளை (19-06-2020) வெளியாகும்.
...............

1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் இருந்ததில்லை. அடிமைத்தனத்தை வெறுத்ததுடன் அதனை ஒழிக்க முயன்றனர். ஆனால், அசுரர்களிடையே (திராவிடர்களிடையே) தொழில் அடிப்படையில் பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், அடிமை வியாபாரம், வேசித் தொழில் அனைத்தும் இருந்தன. எனில், இன்றைய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமைத்தனத்திற்கு ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்?

2. ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த ஆரியர்கள் அடிமை வியாபாரமும், வேசித் தொழிலும் செய்யும் அசுரர்களை தங்களுக்கு கீழானவர்களாக நினைத்தது இயல்புதானே?

3. அசுரர்களிடைய பல்வேறு தொழில் செய்யும் திறமைசாலிகள் இருந்தாலும் அவர்கள் போர் வீரர்களை விட கீழானவர்களாக கருதப்பட்டதும், சிற்பிகளும், விவசாயிகளும்கூட பாதி அடிமைகளாக நடத்தப்பட்டதுமான அசுரர்களின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே அவர்கள் ஆரியர்களிடம் வீழ காரணமாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகம் ஆரியர்கள் அல்லாத ஒரு சமூகத்திடமும் வீழத்தானே செய்யும்?

4. தங்கள் தலைவனான இந்திரன் தங்களைவிட அதிகாரமிக்கவனாக ஆக விரும்பியதால் இந்திரப் பதிவியையே ரத்து செய்தார்கள் ஆரியர்கள். ஆனால், அசுரர்களோ அரசனை கடவுளைப் போல் போற்றினார்கள். சுயமரியாதை விஷயத்தில் அசுரர்களைவிட ஆரியர்கள் மேம்பட்டவர்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?

5. ஆரியர்கள் அசுரர்களுடன் நேரடியாகப் போரிட்டு அவர்களை கொன்றழிக்கிறார்கள். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு தீங்கு செய்யாமல் ஆண்களை மட்டும் அழிக்கிறார்கள். ஆரியர்கள் வஞ்சகத்தால் அசுரர்களை வென்றார்கள் என்ற வரலாறும், ஆரியர்கள் வெறும் புரோகிதர்கள், தொழில் செய்யவோ, போர் செய்யவோ லாயக்கற்றவர்கள், அதனால்தான் வஞ்சகத்தால் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்ற கதையும் இதன் மூலம் பொய்யாகிறதல்லவா?

6. ஆரியர்கள் அரசனை தங்களின் சேவகனாக கருதினர். அவனுக்கும் மக்களுக்குமிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் அசுரத் தலைவன் புரோகிதர்களின் உதவியுடன் தன்னை கடவுளுக்கு நிகரானவனாக காட்டி, மக்களைவிட தன்னை மேம்பட்டவனாக ஆக்கிக் கொண்டான். தனது எல்லையற்ற அதிகாரத்துக்காக புரோகிதர்களையும், கடவுளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் முதலில் அசுரர்களே என்பதை மறுக்க முடியுமா?

7. லிங்க பூஜையை அறிமுகப்படுத்தியவர்களும், அதனை வழிபட்டவர்களும் அசுரர்கள். ஆரியர்களின் வருகைக்கு முன்பே கடவுள் மீதான அசுரர்களின் கண்மூடித்தனமான முட்டாள்த்தனத்தின் சான்றுதானே இது?

8. ஆரியர்களின் வருகைக்கு முன்பே அசுர சமூகத்தில் புரோகிதர்கள் என்ற பிரிவினர் இருந்துள்ளனர். அவர்கள் அதிகாரமிக்கவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்துள்ளனர். ஆரியர்களிடையே அப்படியான தனிப்பிரிவு இல்லை என்பதுடன் அசுரர்களின் புரோகிதர்களை அவர்களின் அதிகாரத்தை வெறுக்கவும் செய்தனர். எனில், இன்றைய புரோகித - புரோகிதர்களின் ஆதிக்கத்துக்கு ஆரியர்களை எப்படி குற்றப்படுத்த முடியும்?

9. அசுரர்களைப் பார்த்து ஆயுதங்கள் செய்யவும், படகு ஓட்டக் கற்றுக் கொண்டு கடல் கடந்து வியாபாரம் செய்யவும் ஆரியர்கள் விரும்பினர். அப்படியிருக்க,

அ). ஆரியர்களை புரோகித கும்பல் எனவும், பிற தொழில் செய்ய தெரியாதவர்கள் எனவும், அதன் காரணமாக ஏய்த்து பிழைத்தவர்கள் என்பதும் பிழையல்லவா?

ஆ). கடல் கடந்து வியாபாரம் செய்ய விளைந்தவர்கள் எங்ஙனம் காலப்போக்கில் கடல் கடந்து செல்வது குற்றம் என்று ஆகம விதி கொண்டு வந்தனர்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?

10. அரசு அரசிகர்கள் மக்களிடையே தங்களின் அதிகாரத்தை பெருக்கிக் கொள்ள, அவர்களை அடிமைப்படுத்த புரோகிதர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசனும், புரோகிதர்களும் மக்களைவிட மேலான அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். காலப்போக்கில் அரச வம்சம் ஷத்திரியர்களாகவும், புரோகித வம்சம் பிராமணர்களாகவும் அழைக்கப்பட்டனர். ஆக, அசுர அரச வம்சத்தின் அதிகார மோகமும், அசுர சமூகத்தின் முட்டாள்தனமும், அடிமைத்தனமுமே ஷத்திரிய, பிராமண பிரிவுகள் உருவாகக் காரணம். இதில் ஆரியர்களை எங்ஙனம் குற்றப்படுத்த இயலும்?

11. எந்தவொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவுடன் சுமூகமாக வாழ விரும்புவதில்லை. பரஸ்பரம் ஒன்றையொன்று வெற்றிக் கொள்ளவே முயற்சி செய்யும். எதிர் இனக்குழுவின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இது இயற்கை. ஆரியர்களும் அசுரர்களை வீழ்த்த அவர்களிடையே இருந்த அரசனை கடவுளாக பாவிக்கும் சுயமரியாதை இன்மையையும், புரோகிதர்களுக்கு தரும் கட்டற்ற அதிகாரத்தையும், அசுரர்களுக்கிடையே நிலைபெற்றிருந்த தொழில்ரீதியான படிநிலைகளையும், அடிமைத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். இது இயற்கையான ஒன்று. உலக வரலாறு அப்படித்தான் சொல்கிறது. எனில், ஆரியர்கள் வஞ்சகமாக அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது இயற்கைக்கு மாறான குற்றச்சாட்டு அல்லவா? அசுரர்களை வீழ்த்தியது ஆரியர்களின் சூழ்ச்சியா இல்லை அசுரர்களிடையே நிலைபெற்றிருந்த அவர்களின் கீழான நடைமுறைகளா?

#ValgaMuthalGangaiVarai
#Brahminocracy
#RahulSankrityayan
#ராகுலசாங்கிருத்யாயன்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தீயது ஆரியமா? பிராமணியமா? | ராகுல சாங்கிருத்யாயன் | பேரா. கருணானந்தன் | Prof. A. Karunanandan

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Tharasu Shyam Interview : காங்கிரஸ் வெளியேறினாலும்… ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!

Tharasu Shyam Interview : காங்கிரஸ் வெளியேறினாலும்… ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!

புனைவு வரலாறாகவும் வரலாறு புனைவாகவும் மாற்றப்படும் ஆபத்து | பேரா. கருணானந்தன் | prof. Karunanandan

புனைவு வரலாறாகவும் வரலாறு புனைவாகவும் மாற்றப்படும் ஆபத்து | பேரா. கருணானந்தன் | prof. Karunanandan

Psychiatrist Dr Shalini interacts with Professor Karunanandhan on 16th century indian history

Psychiatrist Dr Shalini interacts with Professor Karunanandhan on 16th century indian history

வள்ளுவருக்கு பார்ப்பன மூலம் தந்த வைதீக வக்கிரம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

வள்ளுவருக்கு பார்ப்பன மூலம் தந்த வைதீக வக்கிரம் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Porunai river civilization - detailed report by professor karunanandan

Porunai river civilization - detailed report by professor karunanandan

“ஆட்சியில் பங்கு கிடையாது!” மேடையில் அறிவித்த Stalin | அடுத்த நொடியே சீண்டிய MP! Jenraam | Election

“ஆட்சியில் பங்கு கிடையாது!” மேடையில் அறிவித்த Stalin | அடுத்த நொடியே சீண்டிய MP! Jenraam | Election

real history behind lord ganesha and ganesh chathurthi - professor karunananthan interview

real history behind lord ganesha and ganesh chathurthi - professor karunananthan interview

பழனி முருகனும், சித்தர்களும், சமண துறவிகளா..? - பேராசிரியர் அ. கருணானந்தன்

பழனி முருகனும், சித்தர்களும், சமண துறவிகளா..? - பேராசிரியர் அ. கருணானந்தன்

இந்திய வரலாறும் பார்ப்பனிய அரசியலும் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

இந்திய வரலாறும் பார்ப்பனிய அரசியலும் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

#MR Radha Comedy ரசிகர்கள் திரும்ப திரும்ப பேசி மகிழ்ந்த MRராதாவின் மறக்கமுடியாத பஞ்ச் டயலாக் காமெடி

#MR Radha Comedy ரசிகர்கள் திரும்ப திரும்ப பேசி மகிழ்ந்த MRராதாவின் மறக்கமுடியாத பஞ்ச் டயலாக் காமெடி

புனைகதைகளை ஏற்கிறோம்; புராணத்தை மறுக்கிறோம். ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

புனைகதைகளை ஏற்கிறோம்; புராணத்தை மறுக்கிறோம். ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

மறைக்கப்படும் திராவிடச் சான்றுகள்; புனையப்படும் வேத வரலாறு | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

மறைக்கப்படும் திராவிடச் சான்றுகள்; புனையப்படும் வேத வரலாறு | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

P Chidambaram vs Nirmala| திகைத்து போன நிர்மலா.. கப் சிப் ஆன நாடாளுமன்றம்!ப சிதம்பரம் சம்பவம்|budget

P Chidambaram vs Nirmala| திகைத்து போன நிர்மலா.. கப் சிப் ஆன நாடாளுமன்றம்!ப சிதம்பரம் சம்பவம்|budget

தமிழர் பண்பாட்டைச் சிதைத்த பேரரசு காலம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

தமிழர் பண்பாட்டைச் சிதைத்த பேரரசு காலம் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

மெக்காலே கிறிஸ்தவ சதிகாரனா? | Macaulay | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

மெக்காலே கிறிஸ்தவ சதிகாரனா? | Macaulay | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

சபாநாயகர் திடீர் தலைமறைவு? ராகுல் அடுக்கிய பகீர் ஆதாரம்! ஓம் பிர்லா இனி தப்ப முடியாது! Valavan

சபாநாயகர் திடீர் தலைமறைவு? ராகுல் அடுக்கிய பகீர் ஆதாரம்! ஓம் பிர்லா இனி தப்ப முடியாது! Valavan

வால்காவிலிருந்து கங்கை வரை நூல் திறனாய்வு

வால்காவிலிருந்து கங்கை வரை நூல் திறனாய்வு

மனிதத் தன்மையற்ற புரோகிதக் கும்பலுக்கானது கீதை | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

மனிதத் தன்மையற்ற புரோகிதக் கும்பலுக்கானது கீதை | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

பகிரங்க பேச்சு | கீதையும் குறளும் சாப்பிடக்கூடியது அல்ல | பேராசிரியர் கருணானந்தம் | Dravidam 100

பகிரங்க பேச்சு | கீதையும் குறளும் சாப்பிடக்கூடியது அல்ல | பேராசிரியர் கருணானந்தம் | Dravidam 100

நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்

நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]