சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பகுதியில் 37 வது வார்ட் மாமன்ற உறுப்பினர் ஜெ. டில்லி பாபு அவர்
Автор: Empire Media
Загружено: 2025-05-06
Просмотров: 868
Описание:
30.5லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரிய ஆகியோர் துவங்கி வைத்தனர்
சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பகுதியில் 37 வது வார்ட் மாமன்ற உறுப்பினர் ஜெ. டில்லி பாபு அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 30.5லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தினை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் P.K.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் R.பிரியா ராஜன், ஆகியோர் துவங்கி வைத்தனர்
இந்நிகழ்வில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் R.D. சேகர்,மண்டல குழு தலைவர் நேதாஜி U. கணேசன் அப்பகுதி கவுன்சிலர் டில்லி பாபு,ரஜினிசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்
மேலும் அதைத் தொடர்ந்து மண்டல குழு தலைவர் நேதாஜிU.கணேசன், மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசுகையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மாநகராட்சி மாமன்றம் உறுப்பினர் 30.5லட்சம் ரூபாய் மதிப்பில் சறுக்கு விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது இதனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது
அடுத்த கட்டமாக விளையாட்டுத்துறையில் உள்ள மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகவும் இப்பகுதியில் சிலம்பம் பயிற்சி, ஃபுட்பால் பயிற்சி, கேரம் போர்டு, வாலிபால், உள்ளிட்ட விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக பல விளையாட்டு மைதானத்தை உருவாக்கி இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
தற்போது முதற்கட்டமாக ஐந்து மாற்றுத் திறனாளி குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாட்டு மையத்தில் சேர்ந்திருப்பதாகவும் பயோமென்னிங் திட்டத்தால் வடசென்னை வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் வட சென்னையில் துர்நாற்றம் இன்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: