15 ஆண்டுகளாக ஓய்வூதியத்தை மாற்றி அமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து வங்கி ஓய்வு பெற்றோர் சங்கம் தர்ணா
Автор: KK News
Загружено: 2026-02-18
Просмотров: 28
Описание:
திருச்சி - 18.02.26
தமிழ்நாடு வங்கி ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வங்கி ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களது முக்கிய கோரிக்கைகளான ஓய்வூதியம் 15 ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாமல் பஞ்சபடியுடன் இணைக்கப்படாமல் தொடர்ந்து அதே நிலையில் உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டும் நியாயம் கிடைக்கவில்லை, எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று இந்தியா முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
எங்களது ஓய்வூதியம் உயர்த்துதல் (அப்கிரடேஷன்) அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும், எங்களது ஓய்வூதியதாரர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையில் கட்டப்படுகின்ற பிரீமியம் தொகையில் ஜிஎஸ்டி உள்ளது அதை விலக்கிக் கொள்ள வேண்டும். அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம் என அதன் ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் M.இஸ்மாயில், G.ராமராஜ்,RT. ராமமூர்த்தி, J. சுரேஷ், தன்ராஜ், காசிம் மற்றும் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் கலந்து கொண்டனர்
KK News
நிருபர்
கார்த்திகேயன்
9944545524
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: