#தைப்பூசவிழாவில்காவடிசெலுத்த
Автор: Mr IMRAN Vlogs
Загружено: 2026-01-27
Просмотров: 38
Описание:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவிலில் செவ்வாய்கிழமை காலை பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 352 சர்க்கரை காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களோடு தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு திங்கட்கிழமை மாலை மருதிப்பட்டி வந்தடைந்தது. அங்கு இரவு சிறப்பு பூஜைகளுடன் அன்னதானம் நடந்தது.செவ்வாய்கிழமை அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் வந்தடைந்தது.
சேவுகப்பெருமாள் கோவிலில் காலை மகேஸ்வரபூஜை நடபெற்றது.பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு 352 சர்க்கரை காவடிகளுடன் கோவிலில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் பழனியை நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டன.
புறப்படும் வழியில் பாரம்பரிய முறைப்படி கொம்பூதி மூன்று மாட்டுவண்டிகள் ரத்தினவேலுடன் முன்னே செல்ல சர்க்கரை காவடிகளுக்கு சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானம் சிங்கம்புணரி நகர் வணிகர்கள்,பொதுமக்கள் சார்பாக வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரத்தார் காவடிகள் சார்பில் பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சர்க்கரை காவடியுடன் புறப்பட்ட இந்த காவடிகள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு பூஜைகள் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும்.பிப்ரவரி 1 ல் மகம் நட்சத்திரத்தன்று பகல் பூஜைக்கு மேல் புறப்பட்டு மலைக்கோவிலில் காவடி செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்து மீண்டும் பாதயாத்திரையாக வீடு திரும்புவது இவர்களது தனி சிறப்பம்சமாகும்.கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்று வந்த பாதையிலேயே இவர்கள் பாதயாத்திரையாக இன்றளவும் சென்று வருவது மாற்றமுடியாத வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: