Ulagalantha Perumal Temple Thirukovilur|உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக்கிரம சுவாமி) திருக்கோவிலூர்
Автор: Aazh Kadalvedan
Загружено: 2024-10-08
Просмотров: 1328
Описание:
@aazhkadalvedan
#perumaltemple #aanmeegam #story
#UlagalanthaPerumal #Thirukovilur #Ulagalanthaperumalthirukovilur #Poonkovalnachiyar #perumaltemple #perumalkoil #perumalkovil #panchakrishnaranya
#divyadesam #HinduTemples #Hinduism #PlacetoWorship #temple #thiruvizha #tamil #story #puranam #aanmeegam #devotional
Ulagalantha Perumal Temple Thirukovilur|உலகளந்த பெருமாள் கோவில் (திருவிக்கிரம சுவாமி) திருக்கோவிலூர்
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ் அடியார்களுக்கு சேவை சாதிக்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டைச் சேர்ந்த 43வது திவ்ய தேசமாகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர்.
thirukovilur ulagalantha perumal temple
Ulagalantha Perumal Temple History in Tamil
உலகளந்த பெருமாள் கோவில் உருவான வரலாறு
மகாபலி சக்ரவர்த்தி
அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான்.
அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று எண்ணினர்.
மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார்.
அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோவில் கருவறையில் மூலவராக வடிக்கப்பெற்றிருக்கிறது.
திருக்கோவிலூர் கோவில் அமைப்பு
மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார்.
இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதனால் ஏற்படும் நற்பலன்கள்
நல்ல பதவிகளை அடைய விரும்புவர்களும், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும்.
Other Deities in Ulagalantha Perumal Temple
இத்திருத்தலத்தில் சேவைசாதிக்கும் இதர தெய்வங்களின் விவரங்கள்: இந்த திருக்கோவிலில் ஶ்ரீவேணுகோபால பெருமாள், தாயார் லட்சுமி, ஶ்ரீநாராயணன், வீர ஆஞ்சநேயர், ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மர், ஶ்ரீராமர், ஆண்டாள் நாச்சியார், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகியவர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாமன மூர்த்தியும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார்.
Tirukoilur Ulagalantha Perumal Temple Timings
தரிசன நேரம்: உலகளந்த பெருமாள் கோவில் காலை 06.30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.
Thirukovilur Series
Kabilar Kundru : • Discover The Hidden Secrets Of Kabilar Roc...
Map location : https://maps.app.goo.gl/E9cHCssPF1vQ5...
Please do Like, Comment and Subscribe to our channel
Facebook Link: / aazh.kadalvedab
Twitter Link : / aazhkadalvedan
Instagram Link: / aazhkadalvedan
Please support our other channel THE ROYAL ROUND YOUTUBE CHANNEL LINK - food Review, Hotel stay & travel guide
• JKR Resort Rameshwaram Review Food Play Ki...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: