முருக மணியே அருளின் கனியே | Muruga Maniye | P Susheela | Murugan Songs Tamil | Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2018-01-04
Просмотров: 51858
Описание:
Muruga Maniye | Murugan song with Lyrics
Album : Saravana Sannidhi
Singer : P Suseela
Music : Surumbian
Lyrics : Thamil Nambi
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
Lyrics :
முருக மணியே அருளின் கனியே
முழுமை தரும் சிவனே
முதலும் நீயே முடிவும் நீயே
முற்றும் உன்பதமே
உருகும் எவர்க்கும் வேலும் மயிலும்
உறவு தர வருமே
உலக வாழ்வில் நிலைக்க இன்னும்
உந்தன் அடைக்கலமே
அன்பு நிறைந்த தாயும் நீயே
அய்யா என் தெய்வமே
பண்பு நிறைந்த தந்தை நீயே
பழனி மலைச் செல்வமே
அறிவை வழங்கும் பெரிய ஆசான்
அமுத மழை வெள்ளமே
பொருந்தும் உறவும் நட்பும் நீயே
பொழிக அடைக்கலமே
உடலில் மனதில் வலிமை ஊக்கம்
உன்னால் வளர்ந்திடுமே
அறிவும் அறிவில் தெளிவும் எனக்கே
அளிக்கும் உன் குணமே
புகழும் பொருளும் பெருமை யாவும்
பொங்கிப் பெருகிடுமே
பழியும் பிழையும் விலகி ஒதுங்க
பாதம் அடைக்கலமே
காலம் மூன்றும் முன்னும் பின்னும்
கந்தன் உன்னிடமே
ஆசை மூன்றால் அலைந்திடாமல்
அருள்க உன்பதமே
இயக்கம் நிறைந்த பிறவி தந்தால்
ஏழை என் செல்வமே
மயக்கம் யாவும் அகலும் விதமாய்
மலர்க அடைக்கலமே
ஐந்து புலன்கள் அமைத்துக் கொடுத்த
அழகு மலை தெய்வமே
ஆறு சுவைநான் அளவில் உகர்ந்தாள்
அதுவும் உன் வளமே
சொல்லில் இனிது சொல்லி வாழ
சூழும் சுடர் தெய்வமே
செயலில் உண்மை நிறைந்து விளங்க
சேந்தன் அடைக்கலமே
காலை மாலை இரவு நண்பகல்
காவல் உனதாகுமே
காணும் உயிர்கள் யாவும் மகிழ்ந்திட
கனிந்த அருள் வேண்டுமே
வீடு நாடு காடு எங்கும்
வேலன் உன் வண்ணமே
ஏதும் உலகும் ஏற்கும் புகழ் பெற
என்றும் அடைக்கலமே
உன்னையல்லால் என்ன உண்டு
உந்தன் துணைப்பொதுமே
உலகில் எவர்க்கும் உனது கோவில்
உயர்ந்த புகழிடமே
முன்னம் பிழைகள் இருந்த போதும்
உந்தும் அருள் தோன்றுமே
மன்னித்தருள்க மனது கனிக
மலர்க அடைக்கலமே
வெற்பில் அறுபடை வீட்டில் கோவிலில்
வேண்டும் உன் சொந்தமே
விதியை வெல்லும் மதி உன் அருளே
விரும்பும் நலம் கூடுமே
கற்கும் கல்வி கலைகள் வளர்தல்
கடம்பன் பரிசாகுமே
காணத்தகும் பதினாறு நலம் தா
தழல்கள் அடைக்கலமே
உலகம் இது என் பிறவி நலத்தின்
உறவில் வளர்ந்தோங்குமே
ஒளியில் நடக்கும் வழியைக் காட்டும்
உனது வேலாகுமே
இலங்கும் மங்களம் என்றும் நன்மைகள்
எதுவும் உன் எண்ணமே
ஏழு இசை நான் நாளும் பாடிட
இறைவன் அடைக்கலமே
குணமும் உயர்ந்திட குளமும் துலங்கிட
குன்றம் வழிக் காட்டுமே
கோவில் நிழலில் என் குடும்பம் செழித்திட
குமரன் கண் பார்க்குமே
அழகன் அடியார் தெளிந்த சான்றோர்
அருகில் என் காலமே
அன்பு நெறியாய் அதனைக் கண்டிட
அருள்கள் அடைக்கலமே
ஆற்றல் கதிர் நீ அருளின் மதி நீ
அய்யா பெரும் தெய்வமே
போற்றிப்படவும் புகழ்ந்து வாழ்த்தவும்
பொருந்தும் கொடைச் செல்வமே
கூற்றும் பிணியும் மாற்றும் பணி நீ
கொண்ட கடனாகுமே
நேற்றுக் கொடுத்தாய் இன்றும் நாளையும்
நிறைக்க அடைக்கலமே
வடித்த வேலும் இடும்பன் நீரும்
வழங்கும் மங்கலமே
வந்த முன்னோர் இனியும் வருவார்
வாழ்வு உன்னிடமே
முடிவுக் காணா இன்பம் இன்பம்
முருகன் உன் சொந்தமே
அடியார் நடுவில் இடமும் நான்பெற
அடிமை அடைக்கலமே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: