திருச்சியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்த அரசியல் பிரமுகர்..
Автор: KK News
Загружено: 2025-08-02
Просмотров: 142138
Описание:
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ள அரசியல் பிரமுகர்
நிர்வாகத்தின் போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து அரசியல் பிரமுகர் தனது அடியாட்களுடன் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
இதனிடையே, திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995 ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரி மில் தொழிற்சாலை இடம் "தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்" நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை பராமரிப்பில் இருந்துவருகிறது.
இந்தநிலையில், டைட்டானிக் கப்பல் பொருட்காட்சிக்காக வாடகைக்காக விடப்பட்ட இந்த இடத்தை பொருட்காட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்து வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், கே கே நகரை சேர்ந்த திமுக நிர்வாகியான, செந்தமிழ்ராஜன் என்பவர் சபரிமில்லுக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் இடத்தினை தனது அடியாட்களுடன் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் அமைத்துள்ளார்.
சபரிமில் நிர்வாகத்தினர் கே கே நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தும், ஆளுங்கட்சியினர் என்பதாலும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனிடையே, திமுக நிர்வாகியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் சபரி மில்லுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை திமுக நிர்வாகியான செந்தமிழ்ராஜன் தனது அடியாட்களுடன் சென்று மிரட்டல் விடுத்ததுடன் கதவை பூட்டிவிட்டு, யாரும் வெளியே செல்லமுடியாது என அனைவரையும் மிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியது.
இதனையடுத்து அவசர எண் 100 க்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திமுக நிர்வாகி மற்றும் அடியாட்களை அங்கிருந்து வெளியேற்றினர்,
இது தொடர்பாக இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர காவல் ஆணையரிடம் சபரிமில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்த பிறகு, நில அபகரிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைத்தும் தனிக்குழுவினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
அனைத்து ஆவணங்கள் கையில் இருந்தாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல திட்டமிட்டு ஆக்கிரமித்து அபகரித்து விட்டனர் என்றும், உடனடியாக போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அபகரித்து உள்ள இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொண்டனர்.
பேட்டி : திரு. ஜார்ஜ் கெவின் - வழக்கறிஞர்
K K News
நிருபர்
கார்த்திக் செழியன்
இந்த சேனலை லைக் & ஷேர் மற்றும் Subscribe செய்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: