புதன் பகவான் காயத்ரி மந்திரம் | சக்திவாய்ந்த நவகிரக புதன் மந்திரம் | in Tamil lyrics | Navgrah
Автор: Shivayogi Gnana Peetam
Загружено: 2022-04-05
Просмотров: 909
Описание:
#navagrahabhudhaGayathriMantra
#hindudevotionalmeditationmantra
#tamildivineholylordprayerslogan
#spiritualchantingmusicsong
#bakthi
மிக சக்தி வாய்ந்த நவகிரக புத பகவான் காயத்ரி மந்திரம்
ஸ்ரீ நவக்கிரக புதன் பகவான் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ: புதஹ் ப்ரசோதயாத்||
இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் வீட்டிலோ நல்லெண்ணெய் தீபம், ஏற்றி சிறிது பச்சைப்பயிர்களை நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 108 முறை மந்திர உரு ஜெபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.
புதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.
நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும்.
நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். ஆனால் கவலை தேவை இல்லை புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது நல்லது. தினமும் ஜபிக்க முடியாதவர்கள் புதன் கிழமைகளில் ஜபிக்கலாம். இதை ஜபித்தால் செய்யும் தொழில் தழைத்தோங்கும். அறிவும் ஆற்றலும் பெருகும். நாக்கு மற்றும் மூளை சம்மந்தமான நோய்கள் அகலும். புதன் கிழமைகளில் புத பகவானுக்கு வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை கூறுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.
புதன் பகவான் பரிகாரங்கள்
புதன் பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது புதன் பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.
மேற்கூறிய பரிகார பூஜை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் கிழமைகள் தோறும் காலை 8 மணிக்குள்ளாக சென்று புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயிறு பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, புதன் பகவானின் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே புதன் பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும்.
ஓம் நமசிவாய
அனைவரும் அன்பு மகிழ்ச்சி கருணை பொங்க நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சிறப்புடன் வாழ்க
அனைவருக்கும் எனது பூரண ஆசிகள்
ஸ்ரீ ஆனந்தகிரி சுவாமிகள்
சிவயோகி சேவா மையம்
Sri Navagraha Bhudha Bhagavan Gayatri Mantra
Oom Gajat Vajaya Vidmahee Sugha Hastaya Dhemahi |
Tanno: Bhudha Prachodayat ||
our blessings to all
Oom Namashivaya
Sri Aanandagiri Swami
Sivayogi Gnana Peetam
Special Thanks to Sivayogi Seva Maiyam Members and Desiples.
Poem: Vedic Mantra
Category : Traditional Mantra
Singer: Sri Aanandagiri Swami
Video: Siva Krithick
Production: Sivayogi Seva Maiyam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: