#tirupur
Автор: Uzhaipali
Загружено: 2026-02-28
Просмотров: 12
Описание:
அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் வீர ஆஞ்சநேயர் என்கிற அனுமந்தராய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கொங்கு நாட்டில் பெரும்பழனாபுரி எனும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் என்கிற அனுமந்தராய சுவாமி திருக்கோவில் 15 ஆம் நூற்றாண்டில் வியாசராசர் என்னும் மகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு எழுந்தருளி அருள் பாலித்து வந்தார். இந்தக் கோவிலின் முழு கட்டுமான பணிகள் நிறைவு பெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோசலே வியாச ராஜ மடம் ஸ்ரீ ஸ்ரீ 1008 வித்யா விஜய தீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை சிறப்புற நடத்தி வைத்தார்.
நேற்று காலை 8 மணிக்கு யாக சாலை பூஜை ,கலச ஸ்தாபனம் மற்றும் பிரதிஷ்டாமன் ஹோமங்கள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தொடர் பூஜைகளுக்குப் பிறகு இன்று காலை எட்டு மணிக்கு பிராண பிரதிஷ்டை மற்றும் கலச மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: