உலகம் போற்றும் முண்டாசு கவி பாரதிக்கு கொட்டகலையில் முதன்முறையாக கிராமத்தில் சிலை வைப்பு
Автор: Iதமிழ் itamil
Загружено: 2026-01-16
Просмотров: 99
Описание:
உலகம் போற்றும் முண்டாசு கவி பாரதிக்கு கொட்டகலையில் முதன்முறையாக கிராமத்தில் சிலை வைப்பு.
உலகம் போற்றும் முண்டாசு மகா கவி பாரதிக்கு கொட்டகலை ஜெயபிரேம் காடன் கிராமத்தில் சிலை திறக்கும் நிகழ்வு சுப்பையா செல்லம் ஞாபகர்த்த கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் நேற்று 16 ம் திகதி மாலை இடம்பெற்றது.
இறைவணக்கத்துடன் ஆரம்பான இந் நிகழ்வில் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு கிராமம் ஒரு நாடு ஒரு சமூகம் எப்படியிருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவு வரிகளான 'மனதில் உறுதி வேண்டும்' 'வாக்கினிலே இனிமை வேண்டும'; 'நினைவு நல்லது வேண்டும்' போன்ற கவி வரிகளை உறுதி மொழியாக வாசிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பாரதியின் கவிகள் இந்த உலகிக்கு இன்று எவ்வளவு பொருத்தமானது அதில் உள்ள அர்த்தங்கள் அழியா சுவடுகளாக மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பதனையும் ஒரு கிராமத்தில் சிலை வைப்பதன் மூலம் பாரதியின் சமூக நியாயங்கள் நிலைக்க வேண்டும் என்பதனை உருவாக்குவதற்கு உதவ வேண்டும். என்ற நோக்காக கொண்டே பாரதியின் சிலை வைக்கப்படுகிறது என்பதனை பலரும் வலியுறுத்தினர்.
இதன் போது சுப்பையா செல்லம் ஞாபகர்த்த கல்வி நிதியத்தின் ஸ்தாபக தலைவர் சுப்பையா பத்மநாதன் கல்விக்கு ஆற்றும் பணிக்காக கிராம மக்களால் பொன்னடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அந்த கிராமத்தில் கல்வி ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாரதியின் சமூக விடுதலை பாடல்களும் ஒலிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு செல்லம் ஞாபகர்த்த கல்வி நிதியத்தின் ஸ்தாபக தலைவர் பத்மநான் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஹட்டன் நுவரெலியா கல்வி வலயங்களின் உதவிகல்விப்பணிப்பாளர்கள் திம்புல்ல பத்தனை பொலிஸ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கிராம சேவகர் விரியுரையாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: