“விஜய் மேடைக்காக காமெடி செய்கிறார்” – கோவில்பட்டியில் கடம்பூர் செ. ராஜீ அதிரடி பேட்டி!
Автор: Captain News
Загружено: 2026-02-24
Просмотров: 160
Описание:
மேடைக்காக சும்மா காமெடி செய்கிறார். விஜய். அவர் காமெடி பண்றத நம்ம சீரியஸா எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை
விஜயை அதிமுகவிற்கும், த. வெ. கவிற்கும் போட்டி என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். சொல்ல மாட்டார் - ஏனெனில் அதிமுகவின் சுயரூபம், சுய பலம் என்னவென்று விஜய்க்கு தெரியும் - கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர். செ. ராஜீ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செண்பகவல்லி அம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியையும் முன்னாள் அமைச்சர் கடம்பூர். செ. ராஜீ தொடங்கி வைத்தார்
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
த.வெ.க. தலைவர் விஜய் காமெடி செய்தியாளர்களிடம் பேசுகையில்
த. வெ. க. கட்சி எத்தனை தேர்தலை சந்தித்து இருக்கிறது. ஒரு உள்ளாட்சித் தேர்தலை கூட அது அந்த கட்சி சந்திக்கவில்லை
அதிமுக வரலாறு தம்பி விஜய்க்கு தெரியாது
அதிமுக கட்சி ஆரம்பித்து ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்த கட்சி அதிமுக. இந்த வரலாறு தம்பி விஜய்க்கு தெரியாது
த. வெ. க கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை
த. வெ. க. யாருக்காகவது போட்டியாக இருந்து விட்டு போகட்டும். எங்களுக்கு யாரும் போட்டி இல்லை
தமிழக தேர்தல் களத்தில் இன்றைக்கு அதிமுகவுக்கு போட்டி யாரும் இல்லை என்பதுதான் நிதர்சமான உண்மை
அதனால்தான் அவர்களுக்குள் சண்டை போடுகின்றனர். நானும் போட்டி நீயும் போட்டி என்று கூறுகின்றனர்
விஜயை அதிமுகவிற்கும், த. வெ. கவிற்கும் போட்டி என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். சொல்ல மாட்டார்
ஏனெனில் அதிமுகவின் சுயரூபம், சுய பலம் என்னவென்று விஜய்க்கு தெரியும்
மேடைக்காக சும்மா காமெடி செய்கிறார். விஜய். அவர் காமெடி பண்றத நம்ம சீரியஸா எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை
சசிகலா கட்சி தொடங்கப் போவது தெரியாது. அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது ஒரு கட்சியாக உள்ளது.
அதிமுகவில் இருந்த போது பல்வேறு பதவிகளை பெற்று பணியாற்றினார். இடையில் எங்களுக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்த போது அம்மாவின் பேரில் ஒரு கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். பல்வேறு தேர்தலை சந்தித்திருக்கிறார் நாங்கள் எதிரும் புதிருமாகத்தான் இருந்தோம்.
திமுக ஆட்சி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு கருத்தோடு நாங்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இன்று இணைந்துள்ளோம்
அரசியல் இயக்கமாக இல்லாதவர்களுக்கு கருத்து சொல்வது நன்றாக இருக்காது
ஆட்சியில் பங்கு என்று திருமாவளவன் கூறினார் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார்
பாட்டாளி மக்கள் கட்சி வந்தால் வெளியே போய் விடுவேன் என்று கூறுகிறார். அவருக்கே அங்கு நிலையான தன்மை இல்லை. அவர் அதிமுக பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது
அதிமுகவில் பொறுப்பான தலைவர் இருப்பதால்தான் எதிர்க்கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தால் நாங்கள் தான் ஆளுங்கட்சியாக இருந்திருப்போம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இரண்டு கோடி உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்தனர். வலிமையான தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதால் தான் இன்றைக்கு 2 கோடியை 30 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட மிகப்பெரிய இயக்கமாக அதிமுக உள்ளது. வலிமையான கூட்டணி அமைத்துள்ளது
திமுக கூட்டணியில் இருப்பதெல்லாம் இயக்கங்கள் தான். அவற்றைக் கட்சியாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தலுக்கு தேர்தல் டிமாண்ட் சொல்லி அவங்க டிமாண்டை கூட்டி கொள்கிறார்கள் அவ்வளவுதான். டிமாண்டை கூட்டி கொள்வதற்காக அரசியல் செய்கின்றனர்
வேங்கை வயல் கிராமத்தில் நடைபெற்ற கொடுமைக்கு இன்றைக்கு வரை தீர்வு காணவில்லை. அந்தக் கூட்டணியில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருக்கிறார். நல்ல உறவு கள்ள உறவு வைத்துக் கொண்டு வேங்கை வயல் கொடுமை பற்றி கேட்க துப்பு இல்லை
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார். திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை இதையெல்லாம் கேட்பதற்கு திருமாவளவனுக்கு யோக்கியதில்லை. அவர் அதிமுக பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது என்றார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: