கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் மது
Автор: TAMILAN PUGAL
Загружено: 2023-08-09
Просмотров: 2276
Описание:
கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற மது எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் தலையில் மது குடங்களை சுமந்து வந்து நாடியம்மனை வழிபட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூரில் அமைந்துள்ள நாடியம்மன் கோயில் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இக்கோயிலின் மது எடுப்பு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நோய் நொடி இல்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற இந்த மது எடுப்பு திருவிழாவில் கீழாத்தூர், மேலாத்தூர், சிக்கபட்டி, கோவில்பட்டி, கட்ராம்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் தலையில் தென்னம் பாலைகளை குடத்தில் வைத்து அதனை மலர்களால் அலங்கரித்து தலையில் சுமந்தவாறு பாரம்பரிய முறைப்படி கும்மியடித்தும் குலவையிட்டவாரும் மது குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தை மூன்று முறை சுற்றி அம்மனை வழிபட்டனர்.
இவ்வாறு ஆடி மாதம் திருவிழா நடத்தபடுவதன் மூலம் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: