திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Benefits in Tamil | How To Eat Tripala legiyam | BTTL
Автор: Back To Tamil Life
Загружено: 2020-02-18
Просмотров: 1462
Описание:
திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Benefits in Tamil | How To Eat Tripala legiyam | BTTL
திரிபலா லேகியம் ஆயுர்வேதத்தில் ஒரு முக்கிய மருந்து பொருளாக கருதப்படுகிறது. திரிபலா ஆயுர்வேதத்தின் கிங் ன்னு சொல்லலாம்.
அந்தளவுக்கு நமக்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது. இந்த திரிபலா லேகியம்.
இப்படி அற்புத மகிமையை கொண்டுள்ள திரிபலா லேகியம் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது.
இந்த மூன்றின் மகிமையைப் பற்றி தனித்தனியாக முந்தைய வீடியோக்களில் தெளிவாகக் கூறியுள்ளேன். இந்த மூன்று மருத்துவ குணங்களும் சேர்ந்து நமக்கு கிடைப்பது தான் இந்த திரிபலா லேகியம்.
இந்த திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் எந்த நோயையும் குணப்படுத்த முடியும்.
இதன் பயன்களைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் சொல்லிக்கொண்டே போகலாம். சில முக்கியமான பயன்களை பற்றி இப்போது பார்ப்போம்.
1. எந்தவிதமான செரிமான பிரச்சனைகளை சரி செய்யும் சக்தி இந்த திரிபலா சூரனுக்கு உண்டு. குறிப்பாக உணவுப்பாதையில் மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை செயல்பட உதவுகிறது.தினமும் திரிபலா சூரணத்தை ஒரு அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வரும் போது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை திருபலா அதிகரிக்கும்.உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்சனை ,நரம்பு வீக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற தீவிரமான பிரச்சனைகள் நாம் சந்திக்க நேரிடும்.எனவே ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் திரிபலா லேகியம் எடுத்துக்கொள்வது நல்லது.
நாம் ஆரோக்கியமாக வாழ எந்த நோயும் நம்மை எளிதில் அணுகாமல் இருக்க நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது ரொம்பவும் முக்கியம். திரிபலா சூரணத்தில் பெரிய அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடி எந்த நோயும் நம்மை தொற்றாமல் பாதுகாக்கும்.
திரிபலா மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட பல ஆயுர்வேத மருந்துகள் மற்றும் எண்ணெய்கள் பல்வேறு விதமான மூட்டு வலிகளை போக்கிட உதவுகிறது.திரிபலா சூரணத்தை தினமும் 5 கிராம் அளவிற்கு எடுத்து அதனை தேனில் குழைத்து வலி இருக்கும் இடத்தில் பூசி வர மூட்டுவலி விரைவில் குணமாகும்.
தினமும் திரிபலா சூரணத்தை எடுத்து கொள்ளும்போது நமது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஹைபர்கிளைசிமிய எனப்படும் அதீத சர்க்கரை நிலை விரைவில் குணமாகும்.
மோசமான சுவாசத்தை குணப்படுதத, திரிபலா சூரணம் மருந்தாக இருக்கிறது. சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. மேலும் சளி, சைனஸ் நோய்களைத் தீர்க்கவும் பயன்படுகிறது.
திரிபலாசூரணம் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திரிபலாவை பொதுவாக எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில், இந்த திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம். இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. உணவுக்குப்பின் ஒரு மாத்திரை என எடுத்துக்கொள்ளலாம்.
திரிபலா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வரும்போது கருவளையம் சரி செய்வது, முடிவளர்ச்சி, பொடுகை சரி செய்வது, சருமப் பொலிவு போன்றவை கிடைக்கின்றன.
திரிபலா சூரணத்தை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் ,தினம் ஒரு அரை டீஸ்பூன் வீதம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே சிறந்தது.
#BTTLvideos #BTTLHealthtips #Backtotamilife
Follow Us On
Youtube : / backtotamillife
FaceBook : / backtotamillife
Instagram: / backtotamillife
E-Mail : [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: