இன்றைய காலகட்டத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக., சேருவது தான் உகந்தது!
Автор: Captain News
Загружено: 2026-02-23
Просмотров: 690
Описание:
*இன்றைய காலகட்டத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக., சேருவது தான் உகந்தது
சகோதரர் விஜயின் அரசியல் வரவு என்பது இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்
இன்றைக்கு புதிய இயக்கங்கள் கூட்டணிக்குள் வந்துள்ளன. அவர்களுக்கு தேவையான இடங்களை அவர்கள் கேட்கலாம். இதனால் குழப்பமான சூழ்நிலை - கோவில்பட்டியில் துரை வைகோ எம்பி பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் மதிமுக., முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களிடம் பேசுகையில்
மதிமுக 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக இணைந்தோமோ, அந்த நோக்கம் இன்றும் தொடர்கிறது. கூட்டணியில் சேருவது, கூட்டணியில் இருந்து விலகுவது, நேற்று வரை ஒரு இயக்கத்தை விமர்சனம் செய்துவிட்டு அடுத்த நாளே அதே இயக்கத்துடன் இணைவது இதற்கெல்லாம் மக்கள் தான் தீர்ப்பு வழங்குவார்கள்.
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும் திமுக தலைமையிலான அணியும், அதிமுக தலைமையிலான அணியும் தான் பிரதான அணிகள்.
மதிமுகவுக்கு கூடுதல் எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷம். ஆனால் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் எங்களால் கூட்டணி தலைமைக்கு நெருக்கடி உருவாக்க கூடாது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிகவை சேர்க்க எல்லா முயற்சியும் செய்தனர். ஆனால் அது நிறைவு பெறவில்லை. தேமுதிக கூட்டணிக்கு போகவில்லை என்பதால் பாஜக விமர்சனம் செய்கிறது. நான் இதை அரசியலாகத்தான் பார்க்கிறேன்.
மகளிர் உரிமை தொகையை பொறுத்தவரை வசதியான குடும்பங்களுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. சமூக நீதியின் அடிப்படையில், ஏழை எளிய குடும்பங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகத்தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அதில் சில பேர் விடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் வழங்குவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.
மக்காச்சோளம் விலை வீழ்ச்சி தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்களிலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஒன்றிய அரசு பயிர் காப்பீட்டு கணக்கீடு செய்யும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்ததால் பயிர் காப்பீட்டு திட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்காச்சோளம் விலை வீழ்ச்சியை பொறுத்தவரை மாநில அரசு மட்டுமல்ல ஒன்றிய அரசும் தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட மாசு காரணமாக தோல் வியாதிகள் மண் வளமும், நீர் வளமும் எல்லாமே மாசுபடுகிறது என்பது குறித்து நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு வந்து முடிந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கிரீன் காப்பர் என்ற பெயரில் திரும்ப வர முயற்சிக்கின்றனர். கிரீன் காப்பர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது ஒரு கெமிக்கல். அது எப்படி க்ரீனாக மாற முடியும்..? அது என்ன இலையா, தழையா..?
கிரீன் காப்பர் என்ற பெயரில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபோதும் தமிழ்நாடு அதற்கு அனுமதிக்காது. தமிழக முதல்வரும் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்குள் வர வாய்ப்பில்லை.
எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கும், கூட்டணிக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக தினந்தோறும் ஒரு அறிக்கை வெளியிடுவார். திமுக அரசு என்ன செய்துள்ளார்கள் என்பது ஒவ்வொரு மகளுக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்காக சொல்லும் அவதூறு.
தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ளனர். அந்த தொழிலுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை அது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிக்க தேவையான உதிரிப் பாகங்களை இங்கே கொண்டு வந்து பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரித்து விற்பனை செய்யும் சூழ்நிலை வந்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்து. தீப்பெட்டி தொழிலை நம்பி இருக்கக் கூடிய பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் லைட்டர்கள் கடுமையான மாசு - வை உருவாக்க கூடியவை.
தீப்பெட்டி தொழிலின் பிரச்சினை குறித்து ஏற்கெனவே தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளேன். பிளாஸ்டிக் லைட்டர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முதல்வர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் தி. மு.ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர். எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில், துரை வைகோ எம். பி.யை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், பிளாஸ்டிக் லைட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், உதிரிப் பாகங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: