தெய்வத்திருமூவர் ஜெயந்தி விழா மற்றும் திருவாசகம்முற்றோதல் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்தியதர்மசாலை
Автор: Sri Ramakrishna vivekananda Sathya darma salai
Загружено: 2026-03-08
Просмотров: 32
Описание:
தெய்வ திருமூவர் ஜெயந்தி விழா மற்றும் 72 வது திருவாசகம் முற்றோதல் நிறைவு விழா
அன்புடையீர்
வணக்கம். இன்று நமது திருக்கோவிலில்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி, உலக நன்மைக்காக,
இன்று 8.2.2027 (ஞாயிற்றுக்கிழமை) திருவாசகம் முற்றோதலுடன் தொடங்கி
தெய்வ திருமூவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாட பட்டது. பூஜனீய சுவாமி தஷஜானந்த மகராஜ் தலைவர் ராமகிருஷ்ண மடம் கோணம் பட்டி சிவகாசி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் சுவாமிஜி அவர்களால் கற்பூர ஆரத்தி செய்து விழா தொடங்கி வைத்தார். வரவேற்புரை மற்றும் அறிமுக உரை திரு.M. விஜயகுமார் அவர்கள் தலைவர் அளித்தார். அதனைத் தொடர்ந்து அமுத மொழிகள் வாசிக்க பட்டது. பின்னர் சுவாமிஜி அவர்களால் நாமாவளி, பஜனை நடத்தப் பட்டது. தொடர்ந்து இல்லறத்தில் இருந்தபடி இறை நிலையை அடைவது எப்படி என சுவாமிஜி அவர்கள் தெய்வ திருமூவர் உபதேசத்தின் மூலம் எளிமையாக விளக்கினார். மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் எழுச்சி மிக்க கருத்துக்களால் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பக்தர்களின் சந்தேகங்களுக்கு சுவாமி அவர்களால் விளக்கம் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆன்மீக வினாடி வினா நடத்தி தெய்வத் திருமூவரின் உபதேச நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது . ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலையின் அறிக்கையை திரு R. பாபு ரங்கசாமி அவர்கள் பொருளாளர் வாசித்து அளித்தார். தொடர்ந்து நன்றி உரை திரு விஜயகுமார் அவர்களால் வழங்கப்பட்டு சுவாமிஜி அவர்களால் கற்பூர ஆரத்தி செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மூவர் ஜெயந்தி விழா நிறைவைத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
(8.2.2027மாதத்தின் இரண்டாம் ஞாயிறு) வழக்கம்போல் திருவாசகம் முற்றோதல் சிவ ஞான வேள்வி நமது ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலத்தில் நடைபெற்றது. திருமங்கலம் மற்றும் வத்தலக்குண்டு அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்றுவரை 72 முற்றோதல் நிறைவு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அனைத்து அடியார்களும் வந்து, பங்கு பெற்று, ஆத்ம பலமும், சிவ ஆனந்தமும், பெறுகின்றனர். தாங்களும், தங்கள் இனிய குடும்பமும், நல்ல நண்பர்களும், உற்ற உறவினர்களும், உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று, ஓங்கி வாழ, நோய் நொடிகள் இன்றி வாழ, குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க, நமது குழந்தைகள் ஒழுக்கம், பண்பாட்டில் சிறந்து விளங்க, நல்ல வேலை கிடைக்க, சொந்த தொழில் சிறப்பாக அமைய, நல்ல குழந்தை செல்வம் பெற, வளமான வாழ்க்கையும், வலிமையான எதிர்காலமும், பாதுகாப்பான முன்னேற்றமும் பெற்று, நிறைநிலை மனிதராக, உத்தம சீலர்களாக வாழ, திருவாசகம் முற்றோதலில் கலந்து கொள்ள இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கின்றோம். வருக! நிறைநிலை பெறுக!
இவண்
ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை
407 விருது நகர் சாலை தெற்கு தெரு திருமங்கலம் 625706
இறை சேவை தொடர்புக்கு
7904294282
9791119473
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: