ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

தேவாரம் - கள்ளார்ந்த பூங்கொன்றை -நோய் நொடிகள் அகல,ஜாதக தோஷங்கள் விலக,பிறவி முக்தியடைய தினமும் ஓதுவது

Автор: பக்திசை

Загружено: 2020-12-29

Просмотров: 11264

Описание: To Support, Kindly Subscribe this Channel.
திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
வைத்தியநாதர், தையல்நாயகி

தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை),ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

கோவில் அமைப்பு: நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.

கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.

சடாயு, வேதம், முருகன், சூரியன், அங்காரகன், பாரம்மா, இராமர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பராசர முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

பொருளுரை :
1.தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
2.ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
3. தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.
11. குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தேவாரம் - கள்ளார்ந்த பூங்கொன்றை -நோய் நொடிகள் அகல,ஜாதக தோஷங்கள் விலக,பிறவி முக்தியடைய தினமும் ஓதுவது

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Avvinaikku Ivvinai அவ்வினைக்கு இவ்வினை திருநீலகண்டபதிகம் விஷஜூரம் நீக்க பாடல் வரிகளுடன் படிக்க எளிதா

Avvinaikku Ivvinai அவ்வினைக்கு இவ்வினை திருநீலகண்டபதிகம் விஷஜூரம் நீக்க பாடல் வரிகளுடன் படிக்க எளிதா

Soundarya Lahari

Soundarya Lahari

தேவாரம் - ஆண்டானை அடியேனை - கொடிய நோய்கள், தீவினைகள், நவக்கிரக தோஷங்கள் அகல 48 நாட்கள் கேட்க படிக்க

தேவாரம் - ஆண்டானை அடியேனை - கொடிய நோய்கள், தீவினைகள், நவக்கிரக தோஷங்கள் அகல 48 நாட்கள் கேட்க படிக்க

தேவாரம் - காதலாகி கசிந்து -திருமணத் தடை நீங்கவும்,கடன் தீரவும்,நல்வழி காட்டவும் வேண்டி பாடும் பதிகம்

தேவாரம் - காதலாகி கசிந்து -திருமணத் தடை நீங்கவும்,கடன் தீரவும்,நல்வழி காட்டவும் வேண்டி பாடும் பதிகம்

இடரினும் கடலினும் – திருவாசகம் | மனதைத் தொடும் சிவன் பக்தி பாடல்

இடரினும் கடலினும் – திருவாசகம் | மனதைத் தொடும் சிவன் பக்தி பாடல்

Neyium Paalum

Neyium Paalum

Джем – தேவாரம் - கள்ளார்ந்த பூங்கொன்றை -நோய் நொடிகள் அகல,ஜாதக தோஷங்கள் விலக,பிறவி முக்தியடைய தினமும் ஓதுவது

Джем – தேவாரம் - கள்ளார்ந்த பூங்கொன்றை -நோய் நொடிகள் அகல,ஜாதக தோஷங்கள் விலக,பிறவி முக்தியடைய தினமும் ஓதுவது

தித்திக்கும்  திருவாசகம்! | இந்த பதிகம் பாடினால் சிவபெருமான் நேரில் தோன்றுவர்! | ஆவுடையார்கோயில்

தித்திக்கும் திருவாசகம்! | இந்த பதிகம் பாடினால் சிவபெருமான் நேரில் தோன்றுவர்! | ஆவுடையார்கோயில்

Древнерусская Музыка 432 Гц: Гусли и Свирель | Исцеление Души

Древнерусская Музыка 432 Гц: Гусли и Свирель | Исцеление Души

உங்கள் கர்மா குறைவதை உணர்த்தும் அறிகுறிகள் |#nammabhoominammasamy

உங்கள் கர்மா குறைவதை உணர்த்தும் அறிகுறிகள் |#nammabhoominammasamy

தேவாரம் - தில்லைவாழ் அந்தணர் - இறைவன் மனம் குளிர, சிவனருளை எளிதில் பெற தொண்டாரை வாழ்த்தி பாடுவது.

தேவாரம் - தில்லைவாழ் அந்தணர் - இறைவன் மனம் குளிர, சிவனருளை எளிதில் பெற தொண்டாரை வாழ்த்தி பாடுவது.

உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளைத் தரும் | வைத்தியநாத அஷ்டகம் | VAIDHYANAATHA ASHTAKAM |BAKTHIPADAL

உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளைத் தரும் | வைத்தியநாத அஷ்டகம் | VAIDHYANAATHA ASHTAKAM |BAKTHIPADAL

Pa. Sargurunathan - Kallaarntha Poonkondrai - Thirupullirukku Velur

Pa. Sargurunathan - Kallaarntha Poonkondrai - Thirupullirukku Velur

அவ்வினைக்கு  | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

தேவாரம் - கச்சைசேர் அரவர் -நாளும் கோளும் நன்மைபுரிய அருளும் நாகேச்சரம் - நாக, காலசர்ப்ப குறைகள் அகல

தேவாரம் - கச்சைசேர் அரவர் -நாளும் கோளும் நன்மைபுரிய அருளும் நாகேச்சரம் - நாக, காலசர்ப்ப குறைகள் அகல

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர்  | Thevaram| Sundarar

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர் | Thevaram| Sundarar

திருக்கரம் இருப்பதே எம்பிரானை வணங்குவதற்கே!  அன்னைப் பத்து திருவாசகம்!

திருக்கரம் இருப்பதே எம்பிரானை வணங்குவதற்கே! அன்னைப் பத்து திருவாசகம்!

துணிவளர் திங்கள் | நோய் தீர்க்கும் திருப்பதிகம் | திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்த சுவாமிகள்

துணிவளர் திங்கள் | நோய் தீர்க்கும் திருப்பதிகம் | திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்த சுவாமிகள்

Thirumakaral - Vinguvilai Kazhanimigu

Thirumakaral - Vinguvilai Kazhanimigu

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு  #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]