புதுச்சேரியில் மாசி மகம் தீர்த்தவாரி காண வருகை தந்த பக்தர்களுக்கு
Автор: மக்கள் மொழி மீடியா - MAKKAL MOZHI MEDIA - MMM
Загружено: 2026-03-03
Просмотров: 31
Описание:
புதுச்சேரியில் மாசி மகம் தீர்த்தவாரி காண வருகை தந்த பக்தர்களுக்கு
முத்துரங்கசெட்டி அன்னசத்திரம் அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது - ஒரு சிறப்பு பார்வை
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
அந்த வகையில் இன்று மார்ச் 3 2026 செவ்வாய்க்கிழமை வைத்திக்குப்பம் முத்தியால்பேட்டை கடற்கரையோர - தீர்த்தவாரிக்கு வருகை தந்த மாசி மக பக்தர்களுக்கு இன்று மதியம் 12 மணி அளவில்
முத்துரங்கசெட்டி அன்னசத்திரம் அறக்கட்டளை சார்பாக ஒன்பதாவது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்துரங்க செட்டி அன்னசத்திரம் அறக்கட்டளை சார்பாக வருடந்தோறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி எஸ்வி பட்டேல் சாலையில் நடைபெற்றது.
இதில் அறக்கட்டளை நிர்வாகி திரு. ஆனந்த செந்தில்முருகன், மேலாளர் வின்சென்ட். மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாசிமக தீர்த்தவாரி சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானத்தை & சுத்தகரீகப்பட்ட குடிநீர் பாட்டில்களுடன் வழங்கினார்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: