TAMIL AND ENGILSIH LYRICAL MUSICAL SONGS AND PHILOSOPHICAL CONCEPTS
Автор: TAMIL AND ENGLISH LYRICAL MUSICAL SONGS.
Загружено: 2025-08-25
Просмотров: 1664
Описание:
TAMIL AND ENGLISH LYRICAL MUSICAL SONGS AND PHILOSOPHICAL CONCEPTS
Verse 1 :
[music]
உன் முகத்திலே சொர்க்கத்தின் குடியிருப்பு.
அங்கே என் ரசனை எல்லாம் அன்றாட தித்திப்பு.
காதலியே காணக்கிடைக்காத விண்ணுலக காரிகையே.
நீயே தூரிகை ஆனாய் என் மனப் பலகையில்.
காதல் ஓவியத்தை தீட்டி காவியம் படைத்தாய்.
[music]
Verse 2 :
சிந்தித்த என் இதயம் உன்னை
சந்தித்ததே காதலின் உதயம்.
கடற்கரை மணலிலே உலா வந்தேன் தென்றலின் அணைப்பிலே.
அங்கே பூலோக நிலா உன்னை சந்தித்தேன் தென்றலின் தோழியாக.
உன் அறிமுகம் துவக்கியதே நம் காதலின் முகாமை.
[music]
Verse 3 :
எந்த உலகில் நான் புகுந்தாலும்
அந்த உலகை ஆனந்தமயமாய் ஆக்கிடுவாய்.
என் எழுதுகோலே காதல் செங்கோலே.
அதை கையில் ஏந்தினாய் என் எழுத்தை நீ ஆண்ட நேரம்.
உன் உருவத்தை வரையாத எழுதுகோல்
உன் உள்ளத்தின் உணர்வை வரைந்தது.
திகட்டாத தேனாய் பொங்கியது உன் புகழ் பாடும் வாசகமே.
அதுவே என் சுவாசமாகி என்னை சுறுசுறுப்பின் சின்னம் ஆக்கியது.
[music]
VERSE 1 :
[MUSIC]
நேரம் ஓடுகிறது.
நாளும் ஓடுகிறது.
ஏ நண்பனே நேரத்தோடு ஓடிடுவோம்.
உற்சாகமே வாழ்வின் உன்னதம்.
ஊக்க மனதும் உடலுமே உற்பத்தியின்
முதல் மூலதனமே.
[MUSIC]
VERSE 2 :
நாளெல்லாம் விழுந்திடும் வியர்வைத்துளிகள்.
அவை பெருக்குவதே பொருளாதாரத்தின் நீர்த்துளிகள்.
தூக்கம் என்பதே சிறிய ஓய்வு நேரம்.
மீதி நேரமெல்லாம் உழைப்பின் சக்கரம் சுழல்கின்றது.
அது மனிதனையும் தன்னோடு சுழலவைக்கின்றது.
[MUSIC]
VERSE 3 :
வெட்டிப்பேச்சு என்பதே வெளிறிவிட்ட பேச்சு.
அது காலத்தை விரயம் செய்திடும் வீண் பேச்சு.
நல்உற்பத்தி என்பதே பேச்சை குறைத்து உழைப்பை கூட்டுவதே.
நாட்டின் கனவு என்பதே முன்னேறிய நாட்டின்
முதல்வரிசை.
[MUSIC]
VERSE 1 :
[MUSIC]
வெள்ளிநிலா வருகிறதே.
கண்ணா உன்னை தேடுகிறதே.
உன்னோடு விளையாட அது அழைக்கிறதே.
ஓர் வாய் பால்சோறு உண்டுவிடு என் கண்ணா.
[MUSIC]
VERSE 2 :
கிண்ணத்தின் பால்சோறு உன் பசிதீர்க்குமடா.
வான் நட்சத்திர கூட்டத்தை வேடிக்கை பாரடா.
கடலை விழுங்கும் வானத்தில் மிதக்கும் நிலவை பாரடா.
இன்னும் ஓர் வாய் அமுதம் உண்டு விடு என் கண்ணா.
பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி விளையாடுவேன் அன்னை நான் .
[MUSIC]
VERSE 3 :
பாட்டி சொன்ன பழங்கதை சொல்லி உனக்கு சோறு ஊட்டுவேன்.
அழாமல் உண்டுவிடு என் கண்ணா.
அப்புறமாய் தாலாட்டுப் பாடி உன்னை தூங்கவைப்பேன்.
வெள்ளிக்கிண்ணத்தை எட்டிப்பார்க்கின்றது வெள்ளி நிலா.
பால்சோறு தனக்கும் ஓர் வாய் தருவாயா என்று கேட்கிறது.
நீ உண்டால் அதற்கும் தருவேன் என் கண்ணா.
[MUSIC]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: