ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம் *Sri Swarna Akarshana Bhairava Ashtakam 24 times with Tamil Lyrics
Автор: BhairaV Guruji
Загружено: 2020-06-27
Просмотров: 134651
Описание:
#ஸ்வர்ணாகர்ஷணபைரவர்அஷ்டகம் #Bhairavguruji #muthugurukkal #ஸ்வர்ண பைரவர் #ஸ்ரீசொர்ணபைரவர் #ஸ்ரீசொர்ணஆகர்ஷணபைரவர் #ஸ்ரீபைரவர் #காலபைரவர்
#வடுகபைரவர் #சொர்ணபைரவர்மூலமந்திரம் # tamil #தமிழ் #பைரவர்மந்திரம் #பைரவர்மூலமந்திரம் #சொர்ணபைரவர்மந்திரம் #மந்திரம்
#DhanamTharumBairavarSong #DevotionalSongTamil
#பைரவர் அஷ்டகம் பாராயணம் செய்வதின் பலன்கள் ;
3 முறை பாராயணம் செய்தால் குருபகவான் அருள் கிடைக்கும் !
6 முறை பாராயணம் செய்தால் தொழில் லாபம் கிடைக்கும் !
8 முறை பாராயணம் செய்தால் சனி தோஷம் விலககும் அருள் கிடைக்கும் !
9 முறை பாராயணம் செய்தால் நவகிரகங்கள் அனுகிரஹம் கிடைக்கும் !
11 முறை பாராயணம் செய்தால் ராகு கேது தோஷம் நீங்கும் !
15 முறை பாராயணம் செய்தால் திருமணம் கைகூடும் !
18 முறை பாராயணம் செய்தால் சத்ருக்கள் விலகும் !
21 முறை பாராயணம் செய்தால் சர்வ திருஷ்டி விலகும் !
24 முறை பாராயணம் செய்தால் நினைத்தது நடக்கும்- கேட்ட வரம் கிடைக்கும் !
54 முறை பாராயணம் செய்தால் குபேர சம்பத்து கிடைக்கும் !
64 முறை பாராயணம் செய்தால் குழந்தை பக்கியம் விரைவில் கிடைக்கும் !
108 முறை பாராயணம் செய்தால் சர்வ கார்யம் ஜெயம் அனைத்திலும் வெற்றி !
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
#ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் பாடல்வரிகள் = LYRICS :
#தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: