ரேஷன்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய்எண்ணை வழங்கக்கோரி-கட்சிசார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
Автор: MGR TV NEWS
Загружено: 2026-02-06
Просмотров: 67
Описание:
*ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரி-கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் ரேசன் கடைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்கப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாமாயிலுக்கு மாற்றாக பல்வேறு சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய்யை வழங்க வலியுறுத்தி சுட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் 100 ஊர் ரேசன் கடைகள் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.இந்த அறப்போராட்டத்தின் 101-வது நாள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் ஐயா சி நாராயணசாமி நாயுடு அவர்களின் 101வது பிறந்தநாளில் சென்னையில் நடைபெற்றது.
(06/02/2026 வெள்ளிக்கிழமை அன்று)
சென்னை எழும்பூர்
இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் சங்க தலைவர் திரு சண்முகம், தலைமையில் செயல் தலைவர் திரு வெற்றி மற்றும் செயலாளர் கேஎம்.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வெளிநாட்டுப் பாமாயிலுக்குப் பதிலாக, சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சத்துணவுச் சமையலில் தேங்காய் எண்ணெய்யை கட்டாயமாக்க வேண்டும்.
கொப்பரைத் தேங்காய்க்கு உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு லாபகரமான கொள்முதல் விலையை அரசு நிரணயம் செய்ய வேண்டும்.
பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வருவாயைப் பெருக்க க இறக்குவதற்கான தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டும்.
தென்னை மண்டலங்களில் தேங்காய் சார்ந்த சிறுதொழில்களை மேம்படுத் அரசு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: