எபிரெய(பைபிள்) எடைகளும் அளவுகளும் | bible hebrew weights and measures | bible study tamil |jesus sam
Автор: Jesus & Sam
Загружено: 2021-08-30
Просмотров: 3659
Описание:
Join My Telegram Channel : https://t.me/Jesus1Sam
எபிரெய எடைகளும் அளவுகளும் | Hebrew weights and measures | bible tips and tricks | jesus sam
#jsbibletips #biblestudy #weight #bibleknowledge #bible #பைபிள் #hebrew
00:00 எபிரெய எடைகளும் அளவுகளும்
00:27 எடை:-
1. ஒரு தாலந்து என்றால் என்ன?
2. ஒரு இராத்தல் என்றால் என்ன?
3. ஒரு சேக்கல் என்றால் என்ன?
4. ஒரு பெக்கா என்றால் என்ன?
5. ஒரு கேரா என்றால் என்ன?
02:14 தானிய அளவு:-
1. ஒரு கலம் (10 எப்பா) என்றால் என்ன?
2. ஒரு யெதர் (5 எப்பா) என்றால் என்ன?
3. ஒரு எப்பா (10 ஓமர்) என்றால் என்ன?
4. ஒரு ஓமர் (1/10 எப்பா) என்றால் என்ன?
03:24 எண்ணெய், திராட்சை இரசம் அளவு:-
1. ஒரு கலம் (bath), குடம், எப்பா என்றால் என்ன?
2. ஒரு ஹின் (படி) (1/6 பாத்) என்றால் என்ன?
3. ஒரு லாக் (Log) அழாக்கு என்றால் என்ன?
4. 1/4 ஹின் (படி) என்றால் என்ன?
04:37 நீளம்:-
1. ஒரு முழம் என்றால் என்ன?
2. ஒரு ஜான் என்றால் என்ன?
3. நாலு விரற்கடை என்றால் என்ன?
4. 1600 ஸ்தாதி என்றால் என்ன?
5. 12000 ஸ்தாதி என்றால் என்ன?
6. 1 ஸ்தாதி என்றால் என்ன?
7. ஓய்வு நாள் தூரம் என்றால் என்ன?
8. ஒரு நாள் பிரயாண தூரம் என்றால் என்ன?
யாத்திராகமம் 37: 24
அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 16: 21
தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.
நெகேமியா 7: 71, 72
71. வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72. மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
யோவான் 19: 39
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
ஆதியாகமம் 24: 22
ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து,
லேவியராகமம் 27: 25
உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
யாத்திராகமம் 38: 26
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
1 இராஜாக்கள் 5: 11
சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.
யாத்திராகமம் 16: 36
ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
லேவியராகமம் 5: 11
இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து,
யாத்திராகமம் 16: 16
அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.
எசேக்கியேல் 45: 11
மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும். அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.
எசேக்கியேல் 4: 11
தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்;
லேவியராகமம் 14: 10, 15
10. போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
15. பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
லேவியராகமம் 19: 36
சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்;
1 இராஜாக்கள் 6: 2, 3
2. சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது.
3. ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 14: 20
அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21: 16
அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
அப்போஸ்தலர் 1: 12
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
எண்ணாகமம் 11: 31, 34
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
#jesussam
@JesusSam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: