ஆழ்மனதில் கனவை பதியவைத்தல்-25ஆம் நாள்- ஷாலினி தொலைக்காட்சியில் 'கனவு மெய்ப்பட' தலைப்பில்
Автор: Inlife Sivakumar
Загружено: 2023-12-23
Просмотров: 805
Описание:
ஷாலினி தொலைக்காட்சி (Shalini TV) - யில் 'கனவு மெய்ப்பட' தலைப்பில் 25-வது நாள் என்னுடைய உரையிலிருந்து...
கனவு என்பது வெற்றி அடைதல், இலட்சியத்தை அடைதல், சாதனை புரிதல், குறிக்கோளை அடைதல் முதலிவற்றைக் குறித்ததாகும்.
பொதுவாக, நம்முடைய படிப்பு, விளையாட்டு, வேலை, தகுந்த துணையைத் தேர்ந்தெடுத்தல், அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை... இவை அனைத்தையுமே ஆழ்மனதில் கனவாகப் பதிய வைத்து மிகப்பெரிய வெற்றியை நம்மால் அடைய முடியும்.
நம்முடைய கனவுகளை, இலட்சியங்களை வெளிமனதின் தலையீடு இன்றி ஆழ்மனதில் பதிய வைத்தால் உறுதியாக அடைய முடியும்.
என்னிடம், ஹிப்னாடிசச் சிகிச்சைக்கு வருபவர்கள் பல்வேறு விதமான கனவுகளுடன் வருகிறார்கள். நான் ஏற்கனவே குறிப்பட்டிருந்தபடி, வீடு கட்ட வேண்டும் என்ற ஒருவரின் ஆசையை அவரது ஆழ் மனதிடம் தெரிவித்த போது அவரது ஆழ்மனம், 'இவன் எங்கே வீடு கட்டப் போகிறான். என்ன செய்வதென்று தெரியாமல் தனக்கே புரியாமல் திரிந்து கொண்டிருக்கிறான்’ என்று அலட்சியமாக சொல்கிறது. இவர், வெளி மனதில் நினைப்பது என்ன? அவரது ஆழ்மனதில் என்ன பதிவாகி இருக்கிறது? என்று பாருங்களேன். ஆழ்மனத்தில் என்ன பதிவாகி இருக்கிறதோ, அதுதான் செய்து கொடுக்கும். நம் வெளிமனதில் என்னதான் ஆசைப்பட்டாலும், விருப்பப்பட்டாலும் அவை அவ்வளவு எளிதில் ஆழ்மனதில் பதிவாவது இல்லை.
அதேபோல, நாம் முன்னரே குறிப்பிட்டபடி, ஒரு தம்பதியரையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அந்தத் தம்பதியர் தங்களுக்கு குழந்தைப் பேறு வேண்டும் என்று வந்தார்கள். இருவருக்குமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. அதற்காக ஏறத்தாழ எட்டு வருடங்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் ஆழ்மனதுடன் பேசும்போதுதான் தெரிகிறது. அதாவது, இவரது குலதெய்வம் அவர் பிறந்த ஊரில் இருக்கிறது. ஆனால், வேறொரு ஊரில் வசிக்கும் இவர், அங்கிருந்தபடி தன்னுடைய குல தெய்வத்தை கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். சிகிச்சையின்போது, 'நான் என்னுடைய ஊரில் இருக்கும் போது, இவர் வேறொரு இடத்தில் இருந்து கும்பிட்டால் எப்படி அவருக்குத் தேவையானதை என்னால் செய்து கொடுக்க முடியும்?' என்று அந்த ஆழ்மனது தன்னைக் குலதெய்வமாக உருவகப்படுத்திக் கொண்டு இந்தப் பதிலை சொல்கிறது.
ஆகவே, நாம் வெளி மனதில் எவ்வளவோ ஆசைப்படுகிறோம். எதை எதையோ செய்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவை எல்லாம் அவர்களின் விருப்பமாக இருக்கிறதே தவிர, நம்புவது வேறொன்றாக இருக்கிறது
வெளிமனதில் நீங்கள் ஒன்றை நினைத்தீர்கள் என்றால், அது நீங்கள் நினைக்கிற எல்லாவற்றையும் ஆழ்மனதுக்கு அனுப்புவதில்லை. நீங்கள் அவநம்பிக்கையுடன் ஒன்றை அணுகி, நான் ஒன்றை விருப்பப்பட்டடேன், அது நிறைவேறவில்லை என்று சொன்னால் அதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், நீங்கள் எதைத் தீவிரமாக நம்புகிறீர்களோ அதுதான் பதிவாகும்.
'நீங்கள் உங்கள் எண்ணங்களினால் பிரபஞ்சத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பில் இருக்கிறீர்கள்’ என்று விவேகானந்தர் சொல்வார். நீங்கள் ஆழ்மனதில் பதிய வைக்கிற எதுவாக இருந்தாலும், அது பிரபஞ்சத்திலும் பதிவாகும். பிரபஞ்சம் செய்து கொடுக்கக்கூடிய வழிமுறைகள் என்பது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது. ஆழ்மனதில் உங்கள் கனவைப் பதிவு செய்துவிட்டீர்கள் என்றால், உறுதியாக அது நிறைவேற்றியே தீரும். ஏனென்றால், அது பிரபஞ்சத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது வெற்றியடைவதற்கு யார் யாருடைய பங்கேற்பு தேவைப்படுமோ அவர்களின் மனதையும் மாற்றக்கூடிய ஆறறல் இந்த பிரபஞ்சத்திற்கு உண்டு.
ஆகவேதான், எந்த ஒரு கனவையும் ஆழ்மனதில் பதிய வைப்பதற்கு ‘ஹிப்னாடிச’ கலையைப் பயன்படுத்துகிறோம். ஹிப்னாடிசக் கலையின் மூலமாக மட்டும்தான் வெளி மனதை செயலிழக்கச் செய்ய முடியும். வெளி மனம் செயலற்று இருக்கும்போது நம்முடைய கனவுகளை ஆழ்மனதில் நேரடியாக எளிதாகப் பதிவு செய்யமுடியும்.
இந்த வெளிமனது என்பது நாம் பதிவிடுகிற கனவுகள் நல்லதா, கெட்டதா? பயனுள்ளதா, இல்லையா? என்கிற ஆராய்ச்சியை எல்லாம் செய்யும். அதற்குப் பகுத்தறிவு உண்டு. நாம் ஏற்கெனவே அனுபவ ரீதியாகவோ அல்லது கேட்டறிந்த, படித்தறிந்த சம்பவங்களின் அடிப்படையில் அது சரியில்லை அல்லது பயனற்றது அல்லது இதை நம்மால் செய்ய முடியாது என்று முடிவெடுக்கும். சில சமயங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும், அதுவரையிலான அதன் அனுபவத்தின் அடிப்படையில் பதிவு செய்யும். ஆகவே, நம் கனவை ஆழ்மனதிற்குச் சில நேரங்களில் அனுப்பாமல் தடுத்துவிடும்.
என்னிடம் பயின்ற ஒரு மாணவி, இந்த ஹிப்னாடிசப் பயிற்சியின் மூலம் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராகத் தேர்வு பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இன்னொருவர், தேர்தலில் வெற்றி அடைந்தார். ஒரு நீச்சல் வீராங்கனை ஐந்து தங்கப்பதக்கங்களை தொடர்ச்சியாக வென்றாள். அதேபோல, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைத்தது. ஐந்து பேர் சென்னையில் வீடு கட்டினார்கள். ஆகவே, கனவை மெய்ப்பட வைப்பதற்கு மிகச்சிறந்த கருவியாக ஹிப்னாடிசம் இருக்கிறது.
மற்றும் சில...
The Course Director Dr.S.Sivakumar is a
Consultant Psychologist and Hypnotist.
He, along with Hypnotist Ramamurthy conducts couse on
Holistic Mesmerism and Hypnotism
and
Chino-Indian Acupressure
at
I am an IAS academy
3362-B, AE-Block,
8th Street, 10th main road,
Anna Nagar, Chennai 600 040
Tamil Nadu
India
#motivation #mindpower #mesmerism #education #hypnotism #students #subconscious
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: