ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

"விடையவன் விண்ணு மண்ணும்" சம்பந்தர் அருளியது குரலிசை by. நன்றி திருத்தணி சாமிநாதன் ஓதுவார்

Автор: Siva Vaithilingam Pondicherry

Загружено: 2023-03-17

Просмотров: 3642

Описание: தலம் i திரு ஒற்றியூர்,
சென்னை

தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.


இறைவர் : ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர்,
எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத் தியாகர்.

இறைவியார் : திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.

தல மரம் : மகிழ மரம்.

தீர்த்தம் : பிரம தீர்த்தம்.

பண்: பஞ்சமம்

பாடல் எண் : 1
விடையவன், விண்ணுமண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள்
படையவன், பாய்புலித்தோல் உடை கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்கவெண்தோடு
உடையவன், ஊனம்இல்லி, உறையும் இடம் ஒற்றியூரே.

பொழிப்புரை :சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன். விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 2
பாரிடம் பாணிசெய்யப் பறைக் கண்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல்ஆடல் இலயம் சிதை யாதகொள்கைத்
தார்இடும் போர்விடையன் தலைவன்,தலை யேகலனா
ஊர்இடும் பிச்சைகொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே.

பொழிப்புரை : பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 3
விளிதரு நீருமண்ணும், விசும் போடுஅனல் காலும்ஆகி
அளிதரு பேரருளான், அரன் ஆகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடுஅணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே.

பொழிப்புரை : ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 4
அரவமே கச்சதாக அசைத்தான்,அலர் கொன்றை அம்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பன்,எந்தை
பரவுவார் பாவம்எல்லாம் பறைத்து, படர் புன்சடைமேல்
உரவுநீர் ஏற்றபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.

பொழிப்புரை : சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 5
விலகினார் வெய்ய பாவம் விதி யால்அருள் செய்து, நல்ல
பலகினார் மொந்தைதாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி,நீர்கொண்டு அடிமேல் அலர் இட்டுமுட்டாது
உலகினார் ஏத்தநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே.

பாடல் எண் : 6
கமையொடு நின்றசீரான், கழ லுஞ்சிலம் பும்ஒலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான், விரி கொன்றையும் சோமனையும்,
அமையொடு நீண்டதிண்தோள் அழகாயபொன் தோடுஇலங்க
உமையொடும் கூடிநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே.

பாடல் எண் : 7
நன்றியால் வாழ்வதுஉள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும் கரு மால்வரை யேசிலையாப்
பொன்றினார், வார் சுடலைப் பொடி நீறுஅணிந்து, ஆர்அழல்அம்பு
ஒன்றினால் எய்தபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.
.

பாடல் எண் : 8
பெற்றியால் பித்தன்ஒப்பான், பெரு மான்கரு மான்உரிதோல்
சுற்றியான், சுத்திசூலம் சுடர்க் கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியால் செற்றஅரக்கன் உட லைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றும்ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே.

பாடல் எண் : 9
திருவின்ஆர் போதினானும், திரு மாலுமொர் தெய்வம்உன்னித்
தெரிவினால் காணமாட்டார், திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவம்எல்லாம் பறையப்படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்றபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.


பாடல் எண் : 10
தோகைஅம் பீலிகொள்வார், துவர்க் கூறைகள் போர்த்துஉழல்வார்,
ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகைஅம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மின், ஏழுலகும்
ஓகைதந்து ஆளவல்லான் உறையும் இடம் ஒற்றியூரே.


பாடல் எண் : 11
ஒண்பிறை மல்குசென்னி இறைவன் உறை ஒற்றியூரைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்தவல்லார்
விண்புனை மேல்உலகம் விருப்பு எய்துவர், வீடுஎளிதே.

பொழிப்புரை : ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .

திருச்சிற்றம்பலம்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
"விடையவன் விண்ணு மண்ணும்"  சம்பந்தர் அருளியது குரலிசை by. நன்றி திருத்தணி சாமிநாதன் ஓதுவார்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

" ஏதும் ஒன்றும் அறிவு இலர்" நோய்கள் அகல அப்பர் அருளியது குரலிசை by. மயிலை Pa. சற்குணநாதர் ஓதுவார்

"பாடக மெல்அடி" மன மகிழ்ச்சி பெரும் சம்பந்தர் அருளியது குரலிசை by. மயிலை Pa. சற்குணநாதர் ஓதுவார்

பா. சற்குருநாதன் - பூவார் மலர் கொண்டு - திருஞானசம்பந்தர்  தேவாரம்

பா. சற்குருநாதன் - பூவார் மலர் கொண்டு - திருஞானசம்பந்தர் தேவாரம்

1977  - 1979 களில் வெளிவந்த கான கந்தர்வன் K.J.யேசுதாஸ் பாடல்கள்  K.J.Yesudas Tamil Superhit  Songs

1977 - 1979 களில் வெளிவந்த கான கந்தர்வன் K.J.யேசுதாஸ் பாடல்கள் K.J.Yesudas Tamil Superhit Songs

🙏🔥 என் அப்பன் ஈசன் தன் பக்தனுக்கா காத்துகிட்டு உட்காந்து இருந்த தலம் திருபெருந்துறை ஆவுடையார் கோயில்

🙏🔥 என் அப்பன் ஈசன் தன் பக்தனுக்கா காத்துகிட்டு உட்காந்து இருந்த தலம் திருபெருந்துறை ஆவுடையார் கோயில்

"பற்றற்றார் சேர்" சிவனை வணங்கும் முறைபற்றி அப்பர் அருளியது நன்றி குரலிசை வயலூர் பாலசந்தர் ஓதுவார்

நமது முன்னோர்களை மகிழ்வித்தல்

நமது முன்னோர்களை மகிழ்வித்தல்

குரு பிரம்மா குரு விஷ்ணு என்று குரு பகவான் கவசத்தை கேட்க கோடி நன்மை கிடைக்கும்-Guru Bahavan Kavasam

குரு பிரம்மா குரு விஷ்ணு என்று குரு பகவான் கவசத்தை கேட்க கோடி நன்மை கிடைக்கும்-Guru Bahavan Kavasam

கோளறு பதிகம் | Kolaru Pathigam |

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

"மீளா அடிமை உமக்கே" ஆழ்ந்த கவலைகள் போக சுந்தரர் அருளியது நன்றி By குரலிசை P.சம்பந்த குருக்கள்

🔴LIVE SONGS வியாழக்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song Tamil

🔴LIVE SONGS வியாழக்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song Tamil

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

"ஓருரு வாயினை" எல்லாம் நலன்களையும் பெற சம்பந்தர் அருளியது நன்றி குரலிசை by. கரூர் சாமிநாதன் ஓதுவார்

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandar Alangaram | Powerful Murugan Devotional | OM TV

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandar Alangaram | Powerful Murugan Devotional | OM TV

கடன்  தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal

கடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal

Sankatahara Chathurthi Most Powerful Vinayagar Bakthi Padalgal | Vinayagar Kavasam And 108 Potri

Sankatahara Chathurthi Most Powerful Vinayagar Bakthi Padalgal | Vinayagar Kavasam And 108 Potri

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil |

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

🙏 Их голоса несут мир | Священные григорианские песнопения

🙏 Их голоса несут мир | Священные григорианские песнопения

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]