கொடுமுடி பதிகம்| Kodumudi padhigam| lord shiva | Pavithran Kalaiselvan
Автор: Pavithran Kalaiselvan
Загружено: 2025-04-01
Просмотров: 5013
Описание:
எடுத்தசைத்த பாதமும் எழுந்துவந்த தாளமும்
தொடுத்தசைத்த மேளமும் தொடர்ந்துவந்த ஆடலும்
அடுத்தடுத்து பாவனை அணையவந்த போதிலும்
கொடுமுடிக்கு நாதனீர் கொடுத்தயின்பங் கோடியே. 1
விடுத்தவேண்டல் வைத்துநீர் விளைந்தஞானம் காட்டுவீர்
கடுத்தபாதம் காட்டியே கனிந்துவந்த சோதியே
படுத்தபோதும் உன்துணை பிணியுமோட வந்திடும்
கொடுமுடிக்கு நாதனீர் கொடுத்தயின்பங் கோடியே..2
அடுக்குமாய பிறப்பினுள் அடங்குமாறு செய்ததோ
சொடுக்குமாய் நிமிடத்தில் சொரூபமான வேதியா
அடுக்குமாமோ பலவினை அடைத்துவந்த வாழ்விலே
கொடுமுடிக்கு நாதனீர் கொடுத்தயின்பங் கோடியே..3
எடுத்தயிந்த பிறவியில் எதற்குமின்பங் காண்கிறேன்
அடுத்தநாளை நினைந்திடா அனேகயின்பங் காண்கிறேன்
தடுத்ததீமை பலவுமே தயங்கியோட காண்கிறேன்
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 4
உடுத்தமேனி வளர்வதும் உறக்கவேண்டி தேய்வதும்
கொடுத்தவுந்தன் கரத்திலே கொடுத்தபின்னும் சோகமேன்
இடுக்கண்கோடி வருகிலும் இயங்குமின்ப மோங்குமே
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 5
படுத்துநோவில் துயருரும் பிணியுமிங்கு இல்லையே
நடுங்குபீதி வருமெனும் நினைப்புமிங்கு இல்லையே
வடுவதேந்தி உலகிலே வருந்ததேவை இல்லையே
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 6
நடுமுடிவென் றொருதுவக்கம் நிறைந்ததெங்கிலும் நாடியே
விடுதலைக்கும் விதையெனவே விடமருந்தி நின்றிட
நெடுந்துயர பிறப்பறுக்கும் நெடுமுடியோன் நிற்கவே
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 7
கெடுநிலைக்கு முடிவென கிடைத்தவாழ்வை மாற்றும்
கெடுதலைதந் தடுத்தவர் கெடவொருகால் எண்ணின்
சடுதியில்வந் தருளினை சுரந்தடியார் காக்கும்
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 8
சுடுவதென்ன சுடருமே சரிவதென்ன மண்ணுமே
தொடுவதென்ன வளியுமே தெரிவதென்ன வானுமே
மடுவிலூறும் நதியுமே மயங்கிதோன்றும் அண்டமுள்
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 9
எடுத்துசொல்ல முடிவதோ எளியனுந்தன் வேலையை
எடுத்தியம்ப எவருளார் எழுத்துரைக்க லாகுமோ
அடுத்துவரும் பலருமே அறிந்துணர்து காண்பரோ
கொடுமுடிக்கு தலைவநீர் கொடுத்தயின்பங் கோடியே 10
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: